19 தவிப்பு

2.8K 133 8
                                    

19 தவிப்பு

வசீகரனின் வேண்டுதலை மறுக்க ஐஸ்வர்யாவால், இயலவில்லை. அவள் சரி என்று தலை அசைத்தாள். வசீகரன் அலமாரியிலிருந்து ஒரு களிம்பை எடுத்து வந்தான். ஐஸ்வர்யாவை கட்டிலில் மீது அமர வைத்து, தானும் அவள் அருகில் அமர்ந்தான். அவளுடைய வலது கையை எடுத்தான். *சிவப்பு கம்பளம்* போல் இருந்த, அவளுடைய உள்ளங்கையை பார்த்து, அவனுடைய இமைகளை மெதுவாக அவளை நோக்கி உயர்த்தினான், "என்ன செய்து வைத்து இருக்கிறாய் நீ?" என்பது போல. அலமாரியில் இருந்து எடுத்து வந்த களிம்பை, மெல்ல அவளுடைய கைகளில் பூச தொடங்க, தாளாத ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள் ஐஸ்வர்யா. உண்மையிலேயே அவளுடைய கை, வலியில் *விண் விண்* என்று தெறித்துக் கொண்டிருந்தது. கதிரவனை அடித்ததில் இருந்தே அவள் எரிச்சலில் தவித்து கொண்டிருந்தாள். அவள் மெதுவாக வசீகரனை கேட்டாள்.

"என்னோட கை, காயம் பட்டிருக்குன்னு, உங்களுக்கு எப்படி தெரியும்?"

"எனக்கு தெரியாதா, நீ எவ்வளவு காயம்பட்டு இருக்கேன்னு?"
என இரட்டை அர்த்தத்தில் கூறினான், அவள் மனதாலும் காயம் பட்டிருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி.

தன்னை சுதாகரித்துக் கொண்டவன்,

"அது ஒன்னும் பெரிய பிரமாதம் இல்ல. உங்க அண்ணனோட கன்னத்தை பார்த்தா, யார் வேணாலும் சொல்லிடுவாங்க. அவன் கன்னத்துல பதிஞ்சிருந்த உன்னோட கையோட அடையாளம் சொல்லும், நீயும் அவனைப் போலவே காயம்பட்டு இருக்கேன்னு. அடியா அது? இடி மாதிரி இல்ல விழுந்தது... யாராவது ஒரு ஜோசியக்காரர் உங்க அண்ணனோட கன்னத்தைப் பார்த்தா, உன்னுடைய எதிர்காலம் மொத்தத்தையும் சுலபமா சொல்லிடுவார். உன்னுடைய கைரேகை அத்தனையும் உங்க அண்ணனோட கன்னத்தில் இருக்கு." என்றான் சிரித்தபடி.

அதைக் கேட்டு ஐஸ்வர்யாவாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. முதல் முறையாக, அவள் வாய் விட்டு சிரித்தாள். அவள் சிரிப்பதையே கண் கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தான் வசீகரன். இது தான் முதல் முறை, அவளுடைய சிரிப்பிற்கு அவன் காரணமாக இருப்பது. அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த ஐஸ்வர்யா, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now