31 மாற்றம்

2.8K 127 6
                                    

31 மாற்றம்

ஐஸ்வர்யாவின் திடீரென்ற மாற்றத்திற்கு காரணம் வசீகரனுக்கு புரியவில்லை. உண்மையில் சொல்லப் போனால், அவளை அவன் தொட்ட போதே ஒரு புயல் அடிக்கும் என்று எதிர்பார்த்திருந்தான். ஆனால், அப்படி நிகழவில்லை. அப்பொழுது அமைதியாக இருந்தவளுக்கு இப்போது திடீரென என்னானது?

"எதிர்பார்ப்பா? எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லையா? என்கிட்ட இருந்து எதுவுமே கிடைக்காதுன்னு தெரிஞ்சு, அதுக்கப்புறமும், என்கிட்ட நீங்க எதையோ எதிர்பார்த்து இருக்கீங்கனா, என்னோட நிலைமை என்ன? நான் பாட்டுக்கு, நான் உண்டு என் வேலை உண்டுன்னு என்னோட வழியில் போக நினைச்சவளை, நீங்க தான் கண்டதையும் எதிர்பார்க்க வச்சீங்க. அத்தனையும் செஞ்சிட்டு, என்கிட்ட பேசாம இருந்து என்ன வெறுப்பேத்துறீங்க... அதுவும் பல வாரத்துக்கு. அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்? உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க? உங்களுக்கு என்ன தான் வேணும்? என்ன கண்றாவி இது?"

அவன் தடியை கெட்டியாக பிடித்து இழுத்தாள்.

"ஆஆஆ...ஐஷு... வலிக்குது"

"நல்லா வலிக்கட்டும். உங்களுக்கு இதெல்லாம் பத்தாது"

"நான் ஹாண்ட்ஸமா இருக்கிறதால, உனக்கு என்னை பிடிக்கலன்னு நீ தான் சொன்ன. அதனால, நான் இந்த மாதிரி அழுக்கா இருந்தா உனக்கு பிடிக்கும்னு நினைச்சேன்."

அவள் யூகித்தது சரி தான். அவன் அவளுக்காக தான் இந்த வேஷத்தில் வந்திருக்கிறான். அவளை குற்ற உணர்ச்சி கொன்றது.

"நீங்க அழகா இருக்குறதால எனக்கு பிடிக்கலன்னு சொன்னேன். ஆனா, இந்த அழுக்கு தாடி பிடிக்கும்னு சொன்னேனா?"

அவன் நெஞ்சில் குத்து குத்து என்று குத்தினாள். வசீகரன் அவள் கரங்களைப் பற்றினான். தன் இதயத்தை சுட்டிக்காட்டி,

"இந்த இடத்தை தவிர நீ எங்க வேணாலும் என்னை அடிக்கலாம். ஏன்னா, என் இதயத்தில் இருக்கிற உனக்கு வலிக்கும்"

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now