1 மனநோயாளி

5.4K 53 11
                                    

1 மனநோயாளி

அந்த மிகப்பெரிய மாளிகையை இனியவன் என்னும் இளைஞனின் அவல குரல் உலுக்கியது. அவனது அக்கா நித்திலா, வேதனையுடன் கண்களை மூட, அவனது பாட்டியோ வேதனை தாங்காமல் கண்ணீர் சிந்தினார். நித்திலாவின் கணவனான சித்திரவேல், இனியவனின் கை கால்களை இரும்பு சங்கிலியால் பிணைத்துக் கொண்டிருந்தான். எப்பொழுதெல்லாம் அவன் கட்டுப்பாட்டை மீறுகிறானோ, அப்பொழுதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது. உண்மையை கூற வேண்டுமானால் அவன் எப்பொழுதுமே கட்டுக்கடங்காதவன் தான், அந்த மோசமான சம்பவத்திற்கு பிறகு...!

என்ன நிகழ்ந்தது?

வியாபார உலகத்தை தன் விரல் நுனியில் சுழல விட்டு இளம் வியாபாரியாக வலம் வந்தவன் தான் இனியவன். அவனது திறமைக்கு முன் புகழ் மண்டியிட்டு கிடந்தது. சமுதாயத்தில் அவன் பெற்றிருந்த மரியாதை, அவனது வயதிற்கு ரொம்பவே அதிகம். அவனால் பல பெரும்புள்ளிகள் பயனற்று போனார்கள். அவனது எதிரிகளுக்கு அவன் இலக்கானான்.

ஒரு நாள், சிலரால் அவன் சூழப்பட்டு, வெகு மூக்கமாய் தாக்கப்பட்டான். அவர்களது இலக்கு அவனது மரணமல்ல. அவனை உதவாக்கரை ஆக்க வேண்டும் என்பது தான். அதனால் ஒரு இரும்பு கம்பியால் அவன் தலையில் அடித்தார்கள். நினைவிழந்து ரத்த வெள்ளத்தில் தரையில் சரிந்தான் இனியவன். அவர்கள் அவனது மண்டையை உடைக்கும் முன், அந்த இடத்தை சென்றடைந்தான் அவனது நண்பனான குருபரன். ஆனால், இனியவன் இப்போது இருக்கும் நிலைமைக்கு மரணம் எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. தலையில் பலமான அடிபட்டதால், அவனுக்கு புத்தி பேதலித்துவிட்டது. அவனுக்கு எல்லாம் மறந்து போனது... அவனையும் சேர்த்து. அவனுக்கு ஏதாவது தர மறுத்தால், கட்டுக்கடங்காதவனாய் நடந்து கொண்டான். அவனது கண்களுக்கு புதிதாகவும், கவர்ச்சியாகவும் தெரிந்த அனைத்தையும் அவன் கேட்டது தான் சிக்கலே...!

அவனை பயமுறுத்திய ஒரே ஒரு விஷயம் ரத்தம். ரத்தத்தை பார்த்தால், ஓலமிட்டபடி அந்த இடத்தை விட்டு ஓடி சென்றான்.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now