7 வித்தியாசம்...

596 41 5
                                    

7 வித்தியாசம்...

தவறான நேரத்தில் தன் முன்னாள் வந்து நின்ற தன் அண்ணன் சொல்லின்செல்வனை பார்த்து, திகில் அடைந்தாள் ஆழ்வி. அவளிடமிருந்து பணத்தை பெறுவதற்க்காக அவன் அடிக்கடி அவள் கல்லூரிக்கு வருவது வழக்கமாய் இருந்தது. இப்பொழுதும் கூட, பணத்திற்காக தான் அவன் அங்கு வந்திருந்தான். ஆழ்வி எப்பொழுதும் அவனுக்கு பணம் கொடுத்ததில்லை என்றாலும், அவளை தொந்தரவு செய்வதை அவன் நிறுத்தவில்லை. சில சமயங்களில், அவனது தொந்தரவை சகிக்க முடியாமல் பார்கவியும் மீனாட்சியும் கூட அவனுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள்.

பார்கவியை நோக்கி கோபத்துடன் வந்தான் சொல்லின்செல்வன். அவளுக்கு முன்னாள் வந்து நின்று, பார்கவியை மறைத்துக் கொண்டாள் ஆழ்வி.

"உன் அண்ணன், ஆழ்வியை ரேப் பண்ணானா?" என்றான் பார்கவியிடம்.

"இல்ல, அவர் என்னை ரேப் பண்ணல. அவர் மனநிலை சரியில்லாதவர். என்னை அட்டாக் பண்ணாரு. அவ்வளவு தான்" என்று அவன் கேள்விக்கு பதில் அளித்தாள் ஆழ்வி.

"பொய் சொல்லாத. அவ சொன்னதை நான் கேட்டேன். அவ உன்கிட்ட மன்னிப்பு கேட்டா. உன் உடம்புல தழும்பெல்லாம் இருக்குதாமே"

"அண்ணா, நடந்ததெல்லாம் நான் உங்ககிட்ட சொல்லிடுறேன்" என்றாள் பார்கவி கெஞ்சலாக.

"நீ என்ன சொல்ல போற? உங்க அண்ணன் என் தங்கச்சியை தொட்ட மாதிரி, நான் உன்னை தொட்டிருந்தா, நீ இப்படித்தான் கேஷுவலா நின்னு பேசிகிட்டு இருப்பியா?"

பார்கவி தலை குனிய, தன் பல்லை கடித்தாள் ஆழ்வி.

"அர்த்தம் இல்லாம பேசுறதை நிறுத்து. நீ என்ன, அவ அண்ணனை மாதிரி மனநிலை சரியில்லாதவனா? உண்மைய சொல்லப்போனா, நீ தான் பைத்தியம் மாதிரி கத்திக்கிட்டு இருக்க. இது என் மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம்னு உனக்கு புரியலையா? ரகசியமா இருக்க வேண்டிய விஷயத்தை, இப்போ நீ தான் சத்தம் போட்டு பேசிகிட்டு இருக்க" அவனைக் கடிந்து கொண்டாள் ஆழ்வி.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now