29 வந்தது வினை
இரவு
வேலைகளை முடித்துக் கொண்டு தன் அறைக்கு திரும்பினாள் ஆழ்வி. அவளுக்காக இனியவன் காத்திருப்பது போல் தெரிந்தது.
"ஆழ்வி, இங்க வா" என்றான்.
"என்ன வேணும் உங்களுக்கு?"
"இங்க வா, எனக்கு தூக்கம் வருது"
கட்டிலுக்கு சென்ற ஆழ்வி அவன் அருகில் படுத்துக்கொண்டாள். அடுத்த நொடி அவள் வயிற்றில் காதை வைத்து உற்று கேட்கலானான் இனியவன்.
"என்னங்க, என்ன செய்றீங்க?"
"சாமி உன் வயித்துல பாப்பா வச்சாரான்னு பார்க்கிறேன்"
அதைக் கேட்டு சிரித்த அவள்,
"நான் சாமிகிட்ட பாப்பா வேணும்னு கேட்கல" என்றாள்.
"ஆனா, நான் கேட்டேன்" என்றான்.
"அப்படியா? உங்களுக்கு ஏதாவது கேக்குதா?"
"இல்லையே..."
"இங்க வாங்க"
மேல் நோக்கி நகர்ந்த அவன் அவளைப் பார்க்க,
"சரியான நேரம் வரும் போது, சாமியே நமக்கு பாப்பா கொடுப்பாங்க. புரிஞ்சுதா?"
"உன் வயித்துக்குள்ள பாப்பா வரும் போது, நீ எனக்கு சொல்லணும்"
"நிச்சயமா சொல்றேன்"
மறுநாள் காலை
சமையலறைக்கு சென்ற ஆழ்வி, அழைப்பு மணியின் ஓசை கேட்டு நின்றாள். முத்து ஓடிச்சென்று கதவை திறந்தான். சித்திரவேல் உள்ளே நுழைவதை பார்த்த ஆழ்வி, கலங்கி போனாள்.
அவன் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவான் என்பதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சித்திரவேலின் ஊடுருவும் பார்வை, அவளை என்னவோ செய்தது. சமாளித்துக் கொண்டு புன்னகை புரிந்து,
"எப்படி இருக்கீங்க, அண்ணா?" என்றாள்.
சித்திரவேலும் தன்னை சமாளித்துக் கொண்டு புன்னகை புரிந்த படி,
"நல்லா இருக்கேன் ஆழ்வி" என்றான்.
அவனை நோக்கி ஆர்வமாய் ஓடி வந்தாள் நித்திலா.
![](https://img.wattpad.com/cover/369867737-288-k860768.jpg)
YOU ARE READING
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)
Romanceஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...