2 புத்தகம்

718 38 3
                                    

2 புத்தகம்

ஏ எம் டி கல்லூரி

இனியவனின் சகோதரியான பார்கவி, தேர்வு நடைபெற்ற கூட்டத்தை விட்டு வெளியே வந்து, தனது தோழி மீனாட்சி உடன் யாருக்காகவோ காத்திருந்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்த ஒரு பெண்ணை பார்த்து புன்னகைத்த படி ஓடிச் சென்று அவனை இறுக்கமாய் தழுவிக் கொண்டாள். 

"தேங்க்யூ சோ மச், ஆழ்வி. நான் இந்த பேப்பர்ல நிச்சயமா ஃபெயில் ஆயிடுவேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்"

"நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். நீ மட்டும் உன்னோட புக்ஸை எனக்கு கொடுக்காம இருந்திருந்தா, என்னால படிச்சிருக்கவே முடியாது" என்றாள் ஆழ்வி

"நல்ல காலம், நான் என் புக்கை உனக்கு கொடுத்தேன்..." என்று சிரித்தாள் பார்கவி.

ஆழ்வியும் மீனாட்சியும் அவளுடன் சேர்ந்து சிரித்தார்கள்.

"அடுத்தது என்ன செய்யப் போற ஆழ்வி?" என்றாள் மீனாட்சி.

"வேற என்ன? ஏதாவது வேலை தேடணும்" என்றாள் சாதாரணமாய்.

ஆழ்வி அவர்கள் இருவருக்கும் நெருக்கமான தோழி என்றாலும், தன்னுடைய குடும்ப நிலையை எப்பொழுதும் அவர்களிடம் கூறியதில்லை. அவளது அம்மா கற்பகம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று விரும்பியவர். அவளது அப்பா கொடுக்கத் தவறிய அந்த ஆடம்பரமான வாழ்க்கையை, தன் அம்மாவிற்கு வழங்க வேண்டும் என்று விரும்பினாள் ஆழ்வி. ஏனென்றால், அவர் விருப்பத்தில் தவறு இருப்பதாய் அவள் நினைக்கவில்லை. தன்னுடைய சாதாரண விருப்பத்தை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாதவராய் இருந்தார் கற்பகம். அவளுடைய அப்பாவால் அவர்களுக்கு வெகு சாதாரண வாழ்க்கையை தான் தர முடிந்தது. அவள் அப்பாவின் மறைவுக்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமானது. வீட்டு வாடகை என்னும் மிகக் குறைந்த வருமானத்தை வைத்து தான் அவர்களது வாழ்க்கை குதிரை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆழ்வியின் அப்பா இறந்தபோது, அவள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். வசதியின்மை காரணமாக அவள்  கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட நினைத்தார் கற்பகம். ஆனால் அதே நேரம், அவளை கல்லூரிக்கு அனுப்புவதை தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. ஏனென்றால் ஆழ்வி ஒருத்தி தான் அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை. தன் குடும்பத்தின் பாரத்தை சுமக்க ஆழ்வியும் தயாராக தான் இருந்தாள். ஏனென்றால் அவளது ஒரே அண்ணன் சிறிதும் பொறுப்பற்றவனாய் சாராயக்கடலில் மூழ்கி திளைத்தான். அவர்களது குடும்ப நிலையை அவளது  தோழிகள் தெரிந்து கொண்டதே அவரது அப்பாவின் இறுதி சடங்கில் தான்.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now