11 இனியவன்
சுதாகரித்துக் கொண்ட தமிழரசி,
"இனியவன் மனநிலை சரியில்லாதவரா? அப்படி இருந்துமா நீ அவரை கல்யாணம் பண்ணிக்க போற? ஏன்?" என்றார் அதிர்ச்சியோடு.
ஆழ்வி அதற்கு பதில் கூறும் முன்,
"அவரு அவளை ரேப் பண்ணிட்டாரு" என்றார் கற்பகம்.
அவர் அப்படி செய்யவில்லை என்று ஆழ்வி கூறும் முன்,
"ரேப் பண்ணாரா? மனநிலை சரியில்லாத ஒருத்தர், எப்படி ரேப் பண்ண முடியும்? அதை செய்றதுக்கு ஒரு தெளிவு வேணும். அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்ல" என்றார் தமிழரசி.
"அவர் என்னை ரேப் பண்ணல. அட்டாக் பண்ணாரு. அவ்வளவு தான்" என்றாள் ஆழ்வி தயக்கமின்றி.
"அதைப் பத்தி எல்லாம் யார் யோசிப்பா? இந்த உலகத்தை பொருத்தவரை, நீ கெடுக்கப்பட்டவ" கற்பகம் வாதாடினார்.
"அதனால இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கிட்டியா?" என்றார் தமிழரசி திகிலுடன்.
"காரணம் அது இல்ல ஆன்ட்டி. நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அம்மாவுக்கு அவங்க ஒரு கோடி கொடுக்கிறேன்னு சொன்னாங்க"
கற்பகத்தை எது இப்படி ஒரு இரக்கமற்ற முடிவை எடுக்கச் செய்தது என்று இப்பொழுது தமிழரசிக்கு புரிந்து போனது. பணம்
என்று வந்துவிட்டால், கற்பகத்திற்கு எந்த நெறிமுறைகளும் கிடையாது. அவருக்கு வேண்டியதெல்லாம் பணம் மட்டும் தான். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். பெற்ற மகளை பைத்தியத்திற்கு திருமணமும் செய்து வைப்பார். தன் பல்லை கடித்துக் கொண்டு கோபமாய் கற்பகத்தை பார்த்தார் தமிழரசி."உனக்கு என்ன பைத்தியமா? நீ எப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்குறேன்னு உனக்கு தெரியுமா?"
"நான் பணத்துக்காக மட்டும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அவனை இவ கல்யாணம் பண்ணிக்கிட்டா, நம்ம நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு வசதியான வாழ்க்கை அவளுக்கு கிடைக்கும்" என்று தன் செயலுக்கு காரணம் கூறினார் அவர்.
VOCÊ ESTÁ LENDO
நீயின்றி அமையாது (என்) உலகு...!
Romanceஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...