17 ஆழ்வி தயார் (நீண்ட அத்தியாயம்)
இனியவனின் அறையின் கட்டுப்பாடு, ஆழ்வியின் கைக்கு வந்தது. அவளுக்கு தெரியும், இனியவனின் சிகிச்சை துவங்கி விட்டால், அவள் நிச்சயம் இனியவனின் அறைக்குள் செல்ல வேண்டி வரும். அவன் அறைக்குள் செல்லாமல் அவனுக்கு சிகிச்சை செய்ய முடியாது. அதற்கு சித்திரவேலின் உதவி தேவைப்படும். நிச்சயம் அவன் அந்த உதவியை செய்ய மாட்டான். ஆனால் இப்பொழுது, அவளுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
"ஆழ்வி, அண்ணனோட ரூம் கதவை திறக்கும் போது ஜாக்கிரதையா இரு" என்றாள் பார்கவி எச்சரிக்கையுடன்.
ஆழ்வி சரி என்று தலையசைக்க, அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாய் அங்கிருந்து நகர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் செல்லும் வரை காத்திருந்த ஆழ்வி, மெல்ல அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தாள். சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தான் இனியவன்.
"என்னங்க..." என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.
தன் தலையை சாய்த்து அவளை பார்த்தான் இனியவன்.
"இங்கே வா" என்பது போல் அவள் கையசைக்க, அவளுக்கு எதிர்ப்புறம் திரும்பி நின்று கொண்டான்.
பெருமூச்சு விட்டாள் ஆழ்வி.
இப்பொழுது அவன் அறைக்குள் நுழையும் ஆபத்தான முடிவை அவள் எடுக்கக் கூடாது. மருத்துவரிடம் பேசிய பிறகு எதையும் முடிவெடுத்துக் கொள்ளலாம். அதுவரை காத்திருப்பது என்று முடிவெடுத்த அவள், தன் அறைக்கு வந்தாள். அப்பொழுது அவளது கைபேசி ஒலித்தது. அதில் மீனாவின் எண்ணை பார்த்து அவள் முகம் மலர்ந்தது. அந்த அழைப்பை அவள் ஏற்றாள்.
"மீனா..."
"ஆழ்வி, சுவாமி, அதாவது மருத்துவர் உன்கிட்ட பேச ஒத்துக்கிட்டாரு. உன்னோட ஃபோன்ல ஜூம் ஆப்பை டவுன்லோடு பண்ணி வச்சுக்கோ. நான் உனக்கு லிங்க் அனுப்புறேன். நான் சொல்லும் போது அந்த லிங்க்குள்ள வந்து, அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லு"
"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மீனா"
"எதுக்கு தேங்க்ஸ்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க? ரெடியா இரு" என்று அழைப்பை துண்டித்தாள்.
YOU ARE READING
நீயின்றி அமையாது (என்) உலகு...!
Romanceஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...