16 கைரேகை
ஆழ்வி எதிர்பார்த்தது போலவே ஒரு புதிய கைபேசியுடன் வந்த நித்திலா, ஆழ்வியின் அறையின் கதவை தட்டினாள். கதவை திறந்தாள் ஆழ்வி.
"நான் உள்ள வரலாமா?" என்று புன்னகை புரிந்தாள் நித்திலா.
"இது உங்க வீடு. இதுக்குள்ள வர நீங்க பர்மிஷன் கேட்க தேவையில்ல"
"இல்ல ஆழ்வி, இது இனியவன் பாலகுமாரனோட ரூம். இதுக்குள்ள அப்படி எல்லாம் பர்மிஷன் இல்லாம யாரும் நுழைஞ்சிட முடியாது"
தான் கொண்டு வந்த கைபேசியை அவளிடம் கொடுத்தாள்.
"இது உங்களுக்காக"
மீனாவையும் சித்த மருத்துவரையும் தொடர்பு கொள்ள அவளுக்கு ஒரு கைபேசி அவசியம் என்பதால், அந்த கைபேசியை பார்த்தவுடன் அவள் நிம்மதி அடைந்தாள். எனினும், அதை உடனே அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், நித்திலா தன் மீது எந்த விதத்திலும் சந்தேகம் கொள்ளக்கூடாது என்று எண்ணினாள் அவள்.
"எனக்கு எதுக்கு இந்த ஃபோன்? நான் யார்கிட்டயும் பேச போறதே இல்லையே. உங்களுக்கு நல்லா தெரியும், என் ஃபேமிலியில கூட எனக்குன்னு யாருமில்ல"
"ஆனா, நீங்க உங்க ஃப்ரெண்ட் மீனா கூட பேசலாமே... இப்போ வேணும்னா இது உங்களுக்கு தேவையில்லாம இருக்கலாம். ஆனா, கூகுள்ல ஏதாவது தேடி தெரிஞ்சுக்கணும்னா இது உங்களுக்கு தேவைப்படும்"
நித்திலா ஏதாவது என்று குறிப்பிட்டது என்ன என்பது அவளுக்கு புரிந்தே இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றி தெரிந்து கொள்ள அது அவளுக்கு உதவும். அதன் பிறகு அவள் அதை மறுக்கவில்லை.
"தேங்க்ஸ்" என்று அதை அவளிடம் இருந்து பெற்றுக்கொண்டாள்.
"அதுல சிம் கார்டும் போட்டிருக்கு. இந்தாங்க, உங்க ஆதார் கார்டு" என்று அவளிடம் கொடுத்தாள் நித்திலா.
"இதுலயும் கொஞ்சம் கையெழுத்து போட்டுடுங்க" சில காகிதங்களை கொடுத்தாள் நித்திலா.
ŞİMDİ OKUDUĞUN
நீயின்றி அமையாது (என்) உலகு...!
Romantizmஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...