23 மிகப்பெரிய மாற்றம்
சித்த மருத்துவரிடம் பேசிவிட்டு, வரவேற்பறைக்கு வந்தாள் ஆழ்வி.
"என்னங்க எங்க?" என்றாள் நித்திலா.
"அவர் தூங்குறாரு" என்று சிரித்தாள் ஆழ்வி.
அவளை நோக்கி ஓடிச் சென்று ஆற தழுவிக் கொண்டு,
"இன்னுவை மாத்தினதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஆழ்வி..." அவள் முதுகை தட்டிக் கொடுத்தாள் நித்திலா.
"என் கடமையை தான் நான் செஞ்சேன்"
"காலையிலேயே உங்களை கட்டிப்பிடிக்கணும்னு தோணுச்சு. ஆனா, உங்க 'என்னங்க' என் மேல கோவப்படுவார்னு பயந்து தான் உங்ககிட்ட வரல. அதுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்" என்று சிரித்தாள் நித்திலா.
மென்மையாய் புன்னகைத்தாள் ஆழ்வி.
"உங்களுக்கு தெரியுமா, ஆழ்வி, நம்ம இன்னு ரொம்ப பொசசிவ். அதை அவன் வெளிப்படையா காட்ட மாட்டானே தவிர, அவன் அப்படித்தான். அதை இன்னைக்கு நான் அப்பட்டமா பார்த்தேன்"
அப்படி என்றால், சித்தமருத்துவர் கூறியது உண்மை தான். இயற்கையாகவே அவனுக்கு பொசசிவ்வான குணம் இருக்கிறது. மருந்தின் தன்மையால் அது மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்கி இருக்கிறது.
அவர்களுடன் மதிய உணவை சாப்பிட்டாள் ஆழ்வி. குருபரனை பார்க்க சென்றிருந்த பார்கவியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். மதிய உணவுக்குப் பிறகு அவர்களுடன் அமர்ந்து சாதாரணமாய் பேசிக் கொண்டிருந்தாள் ஆழ்வி. அவர்களுடன் நெருக்கமாக பழக துவங்கினாள் அவள். ஏனென்றால் சித்திரவேலை எதிர்த்து நிற்க, அவர்களது துணை இன்றியமையாதது என்று அவளுக்கு புரிந்திருந்தது. ஆனால், இனியவனை வெளியே அழைத்துச் செல்வது பற்றி அவள் பேச தயங்கினாள். இவ்வளவு விரைவாக அதைப் பற்றி பேசுவது உசிதமாக இருக்காது என்று அவள் எண்ணினாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அதை பற்றி பேச நினைத்தாள்.
அவள் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தாளே தவிர, அவளது பார்வை இனியவனின் அறைக்கு செல்லும் வழியிலேயே இருந்தது. ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு அறையை விட்டு வெளியே வந்தான் இனியவன், ஆழ்வியை தேடியவாறு. அவனது அறையின் கதவு, திறந்தே இருந்ததால், இந்த முறை அவள் பெயரை கூறி அழைக்கவில்லை. ஆழ்வி அவனை நோக்கி செல்ல நினைத்தபோது,
YOU ARE READING
நீயின்றி அமையாது (என்) உலகு...!
Romanceஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...