52 ஒன்றும் ஒன்றும் ஒன்று

1.1K 67 21
                                    

52 ஒன்றும் ஒன்றும் ஒன்று

வீட்டிற்கு வந்த இனியவன் வரவேற்பு அறையில் யாரும் இல்லாததை கண்டான். கதவை திறந்து விட்ட முத்து அவனையே பார்த்துக் கொண்டு நின்றான்.

"என்ன?" என்றான் புருவத்தை உயர்த்தி.

"நான் மார்க்கெட்டுக்கு போறேன் அண்ணா"

"மத்தவங்கெல்லாம் எங்க?"

"நித்திலா அக்காவும் பாட்டியும் ஜோசியரை பார்க்க போயிருக்காங்க. சித்திரவேல் அண்ணன் காலையிலேயே வெளியில போயிட்டாரு. பார்கவி தங்கச்சிக்கு உடம்பு சரியில்லன்னு அவங்க ஃப்ரெண்ட் அவங்க கூட இருக்காங்க. தங்கச்சிக்கு ஜுரம் அடிக்குது" 

"ஜுரமா?"

ஆம் என்று தலையசைத்தான் முத்து. பார்கவியின் அறையை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடினான் இனியவன்.

பார்கவி உறங்கிக் கொண்டிருக்க, அவளுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஆழ்வி, இனியவனை கண்டதும் சங்கடத்துடன் எழுந்து நின்றாள். அவள் திருமணமானவள் என்று இனியவனுக்கு தெரிந்த பிறகு, அவள் அவனை காண்பது அது தான் முதல் முறை.

ஆனால் இனியவனின் பார்வை முற்றிலும் வித்தியாசமாய் இருந்தது. தனது உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாதவனாய் அவளை பார்த்துக் கொண்டு நின்றான். அவனது பார்வை புதிதாகவும் ஏக்கம் நிறைந்ததாகவும் இருந்தது. இனியவனுக்கு எப்பொழுதுமே கடவுள் நம்பிக்கை இருந்ததே இல்லை. ஒருவேளை கடவுள் என்பது உண்மையாக இருந்தால், அதற்கு ஆழ்வியை போன்ற உருவம் இருக்குமோ என்று எண்ணினான் அவன். அவள் கடந்து வந்த கடினமான பாதைக்கு அவள் நிச்சயம் தயாராக இருந்திருக்க மாட்டாள். ஆனாலும் அவள் அதை கடந்து வந்திருக்கிறாள். அவள் சங்கடத்தில் நெளிவதை கண்ட அவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு,

"கவிக்கு என்ன ஆச்சு?" என்றான் பார்கவியை நெருங்கியவாறு.

"அவளுக்கு ஃபீவர் இருந்தது..."

"இருந்ததுன்னா? இப்போ இல்லையா?"

"இப்போ பரவாயில்ல"

நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ