21 முதல் மாற்றம்

731 55 12
                                    

21 முதல் மாற்றம்

மறுநாள்

மருத்துவர் கூறிய அந்த குறிப்பிட்ட மருந்தை உணவில் கலந்து, அதை இனியவனுக்காக முத்துவிடம் கொடுத்து அனுப்பினாள் ஆழ்வி. சித்திரவேல் வீட்டில் இருக்கும்போது இனியவனின் அறைக்கு அவள் செல்ல வேண்டாம் என்று எண்ணினாள். ஆனால் எப்பொழுதும் எந்த பிரச்சனையும் செய்யாமல் உணவை சாப்பிட்டு வந்த இனியவன், அந்த உணவை சாப்பிடாமல் தரையில் வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டான். அதை கண்ட முத்து, வியப்புடன் அங்கிருந்து வந்தான்.

"அவரு சாப்பிட்டாரா?" என்றாள் ஆழ்வி.

"இல்ல, அண்ணி. அவர் அதை தொடக்கூட இல்ல" என்றான் முத்து.

ஆழ்வி பெருமூச்சு விட்டாள். அவள் இனியவனின் அறைக்கு சென்றால் தான் அவன் சாப்பிடுவான். ஆனால் சித்திரவேல் இருக்கும் வரை அவளால் அவன் அறைக்கு செல்ல முடியாது. அவள் தவிப்போடு காத்திருந்தாள். ஆனால் சித்திரவேலோ, அன்று எங்கும் செல்வது போல் இல்லை. அன்று இனியவன் அந்த மருந்தை சாப்பிட்டாக வேண்டும். அதனால், தன்னை சமாளித்துக் கொண்டு, இனியவனின் அறைக்கு சென்றாள். அங்கு அவன் கட்டிலில் அமர்ந்து, சாப்பாடு தட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தான். ஏனென்றால் அவன் பசியில் இருந்தான். அவளை பார்த்தவுடன் ஓடி வந்து, அவளை இடுப்பை சுற்றி வளைத்து தூக்கிக் கொண்டான்.

"என்னங்க... என்னை கீழே விடுங்க" என்றாள்.

அவளை தூக்கி சென்று, கட்டிலின் மீது இறக்கி விட்டான்.

"உங்களுக்கு பசிக்குதுல்ல? அப்படி இருக்கும் போது ஏன் சாப்பிடல?" என்றாள்.

அந்த தட்டை எடுத்து, அதை அவளிடம் கொடுத்தான்.

"என்ன?" என்றாள் ஆழ்வி.

"ஆஆஆ..." என்று வாயை திறந்து, அவளை ஊட்டி விடுமாறு கேட்டான்.

சிரித்தபடி அவனுக்கு ஊட்டி விட துவங்கினாள் ஆழ்வி. எந்த தொந்தரவும் செய்யாமல் அதை சாப்பிட்டு முடித்தான். முதல் நாள் அவளுக்கு ஊட்டி விட்டது போல், அவன் இன்று செய்யவில்லை. அவனுக்கு பசி அதிகமாய் இருந்ததால், அவன் அவளுக்கு ஊட்டி விட நினைக்கவில்லை.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now