49 முதல் முயற்சி

736 52 8
                                    

49 முதல் முயற்சி

நித்திலாவின் புடவையை வேண்டுமென்றே பற்ற வைத்த சித்திரவேலை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் ஆழ்வி. அதற்கான காரணத்தை அவள் ஓரளவு யூகிக்கவும் செய்தாள். ஒருவேளை அவளது யூகம் சரியானதாய் இருந்தால், இதற்கு மேல் அவள் நிச்சயம் சும்மா இருக்க கூடாது. சித்திரவேல் இனியவனை எந்த விதத்திலாவது தாக்குவான். இனியவனை எச்சரிக்க வேண்டும் என்று எண்ணினாள் அவள். அதற்கு முன் குருபரனிடம் இது குறித்து பேசியாக வேண்டும். சித்திரவேல் செய்த காரியம் பற்றி குருபரனுக்கு  தெரிய வேண்டியது அவசியம். அதனால், குருபரனுக்கு ஃபோன் செய்தாள் ஆழ்வி. அவனது ஃபோன் எங்கேஜ்டாய் இருந்தது. அவன் குருபரன் ஆயிற்றே! அவனது கைபேசி எங்கேஜ்டாய் இருப்பது வியப்பொன்றுமில்லை.

( நாம் ஒருவரது எண்ணை பிளாக் செய்து விட்டாலும் நம்மால் அவர்களை தொடர்பு கொள்ள முடியும். ஆனால் அவர்களால் தான் நம்மை தொடர்பு கொள்ள முடியாது. அவர்களுக்கு நோட்டிஃபிகேஷனும் செல்லாது)

தனது மிஸ்டு காலை பார்த்த பிறகு குருபரன் தனக்கு ஃபோன் செய்வான் என்று காத்திருந்தாள் ஆழ்வி. ஆனால் அவனுக்குத்தான் எந்த நோட்டிபிகேஷனும் வரப்போவது இல்லையே. இனியவன் தான் அவனது எண்ணை பிளாக் செய்து விட்டானே. வெறுப்போடு அமர்ந்திருந்தாள் ஆழ்வி.

சட்டென்று அவளது இதயத்துடிப்பு எகிறியது, இனியவனின் கொலைகார பார்வையை எண்ணிப் பார்த்தபோது. அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை. அவன் தன்னிடம் நெருங்க முயல்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது. ஆனால் அவன் அதை எந்த எண்ணத்தோடு செய்கிறான் என்று தான் புரியவில்லை. மனநிலை சரியில்லாத இனியவனின் மனதில் இருப்பதை முதல் ஃ வரை அவளால் கூறிவிட முடியும். ஆனால் தெளிவான இனியவனை புரிந்து கொள்வது முடியாத காரியமாய் இருக்கிறது. அவனுக்கு அவளை பிடித்திருக்கிறதா, அல்லது அவளை தொடுவது பிடித்திருக்கிறதா என்று அவளுக்கு புரியவில்லை. ஏனென்றால் பணக்காரர்களை பொறுத்தவரை இதெல்லாம் சகஜமான ஒன்றாயிற்றே...! இனியவனும் அப்படிப்பட்ட மன ஓட்டத்தோடு இருப்பானோ என்று பயந்தாள் அவள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவன் அவளை வெறுக்கவில்லை. அந்த எண்ணம் அவளுக்கு மன அமைதியை தந்தது. அவளது மனதில், ஏதோ ஒரு மூலையில், அவன் தன்னை மனைவியாய் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று அவள் நம்பினாள்.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now