41 உண்மை
பொண்டாட்டி என்ற வார்த்தையை கேட்டு அதிர்ந்து நின்றான் இனியவன். குடிகாரன் பொய் கூற மாட்டான் என்று அவனுக்கு தெரியும் அது அவனுக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது. இந்த குடிகாரனிடமிருந்து அவனுக்கு ஏதாவது உண்மை தெரிய போகிறதா?
இங்கும் அங்கும் பார்த்த சொல்லின் செல்வன்,
"அவ வீட்ல இல்ல போல இருக்கே" என்றான்.
"யாரைப் பத்தி பேசுற?" என்றான் இனியவன்.
"வேற யாரு? உன் பொண்டாட்டியை பத்தி தான்... அவ என்னை இங்க பார்த்தா, என் மேல கோவத்துல பாய்வா. ஆனா, அவளுக்கு என் மேல ரொம்ப பிரியம்"
அவனது மனைவிக்கு இவன் மீது பிரியமா? யாரிவன்? அவனது மனைவி யார்? ஒன்றும் கூறாமல், அவனைப் பேச விட்டு அவனையே பார்த்துக் கொண்டு நின்றான் இனியவன்.
"எங்க அம்மா எனக்கு துட்டே கொடுக்க மாட்டேங்குது. அப்போ நாங்க என்ன தான் செய்றது? அதனால தான் அவகிட்ட பணம் வாங்கிட்டு போலாம்னு வந்தேன். எங்க அவ?" என்று இனியவனை தாண்டி கொண்டு உள்ளே சென்றான்.
"நீ யாரைப் பத்தி பேசிகிட்டு இருக்க?" என்றான் இனியவன் மீண்டும்.
"ஆமாம், நீ இப்படித்தானே கேப்ப...! ஒரு பைத்தியக்காரன்கிட்ட நான் வேற என்ன எதிர்பார்க்க முடியும்?"
பைத்தியக்காரனா? இவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? என்று தன் முஷ்டியை மடக்கினான் இனியவன். ஆனால் அவன் உதிர்த்த அடுத்த வார்த்தைகள் அவனை அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
"நீ அவளை கெடுத்ததால தான் அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்னு மறந்துடாத. இல்லன்னா உனக்கு நாங்க ஏன் அவளை கல்யாணம் பண்ணி வெச்சி இருக்க போறோம்?" என்றான் அந்த முட்டாள் குடிகாரன், ஒரு பைத்தியத்திடம் பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற அறிவு கூட இல்லாமல்.
"கெடுத்தேனா?" என்றான் தாங்க முடியாத அதிர்ச்சியுடன்.
"பின்ன என்ன? இல்லன்னா உன்னை மாதிரி ஒரு பைத்தியத்துக்கு எதுக்கு என் தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க போறேன்?"
![](https://img.wattpad.com/cover/369867737-288-k860768.jpg)
BINABASA MO ANG
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)
Romanceஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...