48 தற்செயலாய்...

1K 53 8
                                    

48 தற்செயலாய்...

மறுநாள் காலை

குளித்து முடித்து தலைத் துவட்டியபடி வெளியே வந்தான் இனியவன். அப்பொழுது அவன் அறையின் கதவை தட்டினாள் நித்திலா. கதவை திறந்தவன், முதல் நாள் அவன் வாங்கிக் கொடுத்த புடவையை உடுத்திக் கொண்டு அவள் நின்று இருப்பதை கண்டான். ஆழ்வியும் அவன் வாங்கிக் கொடுத்த புடவையை அணிந்திருப்பாளா என்ற எண்ணம் அவன் மனதில் உதித்தது.

"இன்னு, நல்ல காலம் நீ குளிச்சிட்ட"

"இதுல புதுசா என்னக்கா இருக்கு? நான் தினமும் தானே குளிக்கிறேன்?"

"சீக்கிரம் கிளம்பி கீழே வா"

"ம்ம்ம்..."

நித்திலா அங்கிருந்து சென்றாள்.

உடை மாற்றிக்கொண்டு தரைதளம் வந்தான் இனியவன். அவனது கால்கள் தரையோடு ஒட்டிக்கொண்டது, ஆழ்வி பூஜை அறையில் விளக்கேற்றிக் கொண்டிருப்பதை பார்த்தபோது. அவன் வாங்கிக் கொடுத்த சிவப்பு நிற சேலையில் அவள் கொள்ளை அழகாய் இருந்தாள். விளக்கை ஏற்றி முடித்துவிட்டு கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள். தன் மனதில் எதையோ உணர்ந்த அவள், கண்களை திறந்து, இங்கும் அங்கும் தேடினாள் அது இனியவனை வியப்புக்குள்ளாக்கியது.

இனியவனின் நிலைத்த பார்வை தன் மீது இருப்பதைக் கண்ட அவள் திகைத்து நின்றாள். ஒரு மெல்லிய புன்னகை அவன் இதழ்களில் தவழ்ந்து கொண்டிருந்தது, அவளது வயிற்றில் ஏதோ செய்தது.

தன் பார்வையை அவள் மீது இருந்து அகற்றவே முடியவில்லை இனியவனால்... அவனது கண்களில் காதல் நிரம்பி வழிந்தது. அவனுக்கு முன்னால் பதற்றத்தோடு நின்றிருக்கும் அந்தப் பெண் வேறு யாரும் அல்ல, அவனது மனைவி. அவன் தன் கணவன் என்று அவளுக்கும் தெரியும். அவனும் அவள் தன் மனைவி தான் என்று அறிந்து கொண்டு விட்டான். இருந்தாலும் அவர்களுக்கிடையில் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏனோ அவனது கண்களில் அவள் என்றும் இல்லாத அளவிற்கு அன்று அழகாய் தெரிந்தாள். அவன் வாங்கிக் கொடுத்த புடவையை அவள் அணிந்து இருந்தால் என்பதற்காக அல்ல... அவளது உள்ளம் ஈடு இணை இல்லாதது. கலங்கமற்ற இதயம் அவளுடையது. அவள் சுவாமிஜியுடன் பேசியது அவன் காதுகளில் எதிரொலித்தது. அவள் அவனுக்காக என்னவெல்லாம் செய்தாள்... அவனுடன் என்னவெல்லாம் செய்தாள் என்று அவனுக்கு தெரியும். அவனது மன நோய்க்கு சிகிச்சை அளித்திருக்கிறாள், அவனை அக்கறையாய் கவனித்துக் கொண்டிருக்கிறாள், அவனை கட்டி அணைத்து இருக்கிறாள், அவனுக்கு முத்தமிட்டு இருக்கிறாள், ஒரே கட்டிலில் அவனுடன் உறங்கி இருக்கிறாள். அந்த எண்ணம் அவனுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)Onde histórias criam vida. Descubra agora