18 யுக்தி
தன் கையை விரித்து இனியவனை தன்னிடம் வருமாறு அழைத்தாள் ஆழ்வி. ஆனால் இனியவனின் கண்களோ அவள் தரையில் வீசி எறிந்த கிளிப்பின் மீதே இருந்தது. சில வேக அடிகள் எடுத்து வைத்து அவனை நெருங்கிய அவள், அவனைத் தழுவிக் கொண்டாள். சற்று நேரத்திற்கு முன்பு அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்ட அவன், இப்பொழுது திருதிருவென விழித்தபடி சிலையென நின்றான். அவனைப் பார்த்து புன்னகைத்த ஆழ்வி, அவன் முகத்தை தன் கரங்களில் ஏந்தி, நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு, பிறகு அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். மந்திரித்து விட்டவனை போல் நின்றான் இனியவன். பரட்டையாய் இருந்த அவனது தலை முடியை தன் விரல்களால் கோதி ஒழுங்கு படுத்தினாள். இனியவனின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நம்மால் கூற முடியவில்லை. அவன் கண்ணிமைக்காமல் அவளையே வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் முதல் பெண் ஆயிற்றே அவள்...! உண்மையை கூறப்போனால், அவனிடம் இதுவரை யாருமே அப்படி நடந்து கொண்டதில்லை.
அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவனுக்கு தோன்றவில்லை, வேறு எதுவும் செய்ய வேண்டும் என்றும் தோன்றவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவள் செய்ததெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளது முத்தம், அவளது தொடுதல், அவளது அணைப்பு, அவள் அவன் தலையை கோதிவிட்ட விதம், அனைத்தும் பிடித்திருந்தது.
அவள் மெல்ல கட்டிலை நோக்கி நடந்தாள். சாவி கொடுத்த பொம்மையை போல் அவளை பின்தொடர்ந்தான். அவன் தோள்களை அழுத்தி, அவனை கட்டிலின் மீது அமரச் செய்து, அவனை படுத்துக்கொள்ள செய்தாள். சொன்ன பேச்சை கேட்கும் நல்ல பிள்ளை போல் அதை செய்தான் அவன். அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அவன் தலையை மெல்ல கோதிவிட்டாள். ஏற்கனவே தூக்க கலக்கத்தில் இருந்த அவனை, உறக்கம் மெல்ல ஆட்கொண்டது. சத்தம் செய்யாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் ஆழ்வி.
மறுநாள் காலை
மருத்துவருக்கு ஃபோன் செய்து, அவரிடம் நடந்தது எதையும் மறைக்காமல் கூறினாள் ஆழ்வி. அதை கேட்ட மருத்துவர் திகைப்படைந்தார்.

VOUS LISEZ
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)
Roman d'amourஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...