15 பசுத்தோல் போர்த்திய புலி

617 49 7
                                    

15 பசுத்தோல் போர்த்திய புலி

ஆழ்விக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. சற்று நேரத்திற்கு முன்பு அவளிடம் தேன் ஒழுக வாழைப்பழம் போல் பேசிய ஒரு மனிதன், ஒரு விஷ நாகம் என்பதை அவளால் எப்படி நம்ப முடியும்?

*இந்த உலகம் பணத்திற்கு பின்னால் தான் சுற்றிக் கொண்டிருக்கிறதா? முதலில் அவளது அம்மாவும், அண்ணனும்... இப்பொழுது சித்திரவேல்...! சித்திரவேல் இனியவனின் பணத்திற்காக தான் இதை செய்திருக்க வேண்டும். நித்திலாவின் நிலைப்பாடு என்ன? இதில் அவளுடைய பங்கு இருக்கிறதா? அந்த எண்ணமே அவளை திகிலடையச் செய்தது. அவர்கள் பேசுவதை மேலும் ஊன்றி கவனித்தாள்.

"எதுக்காக இனியவனுக்கு இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணி வச்சீங்க?" என்றான் அந்த மற்றொரு மனிதன் சித்திரவேலிடம்.  

"எல்லாம் நித்திலாவால தான். எப்படியாவது தன்னோட தம்பியை க்யூர் பண்ணிடணும்னு அவ துடிக்கிறா. இந்த தடவை அவளை எதிர்த்து என்னால எதுவுமே செய்ய முடியல" என்று அலுத்துக் கொண்டான் சித்திரவேல்.

"ஒருவேளை, அவங்க இனியவனோட ட்ரீட்மெண்ட்டை மாத்தணும்னு நினைச்சா என்ன செய்றது?"

"அப்படி நடக்க நான் விடமாட்டேன். அவங்க ட்ரீட்மெண்ட்டை மாத்த நினைச்சா, யாருக்கும் தெரியாம நம்ம வச்சிருக்கிற இன்ஜெக்ஷனை அவனுக்கு போட ஆரம்பிச்சிடலாம்"

தன் பயத்தை விழுங்கினாள் ஆழ்வி.

"அப்படின்னா, நான் எதுக்கும் ஒரு பவர்ஃபுல்லான இன்ஜெக்ஷனை அமெரிக்காவிலிருந்து வர வைக்கிறேன். உன் பொண்டாட்டியோ, இனியவன் பொண்டாட்டியோ, அவனோட ட்ரீட்மெண்ட்டை மாத்தணும்னு பிடிவாதம் பிடிச்சா, அதை நம்ம அவனுக்கு போட்டுவிட்டுடலாம். அது மூலமா நம்ம அவனை எப்பவுமே பைத்தியக்காரனா வச்சிருக்க முடியும்"

"நீ கவலைப்படாதே. ஆழ்விக்கு என் மேல நிச்சயம் சந்தேகம் வராது. மத்தவங்களை என்னை நம்ப வைக்கிறதுல நான் எக்ஸ்பர்ட். இந்த குடும்ப பொம்பளைங்க நாய்க்குட்டி மாதிரி என் காலையே சுத்தி வராங்க. அவங்களை எப்பவும் நான் என் கட்டுப்பாட்ல தான் வச்சிருப்பேன்" பெருமையாய் கூறினான் சித்திரவேல்.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now