35 எவ்வளவு வித்தியாசம்...!

1K 60 14
                                    

35 எவ்வளவு வித்தியாசம்...!

பாட்டியின் அறைக்கு வந்த பார்கவி, அவருக்கு பக்கத்தில் அமர்ந்து,

"ஏன் பாட்டி அக்கா கிட்டயும் மாமா கிட்டயும் இவ்வளவு ரூடா நடந்துக்குறீங்க?" என்றாள்

"நான் ஏன் ரூடா இருக்கக் கூடாது?"

"அவங்க நம்ம குடும்பம், பாட்டி"

"அதுக்காக அவங்க என்ன வேணாலும் செய்யலாம்னு அர்த்தம் இல்ல"

"நீங்க மாமாவை இவ்வளவு தாக்கி பேசி நான் பார்த்ததில்ல. நீங்க அவரை சந்தேகப்படுறீங்களா?"

"அவர் நம்ம மேல உண்மையிலேயே அக்கறையோட இருக்காருன்னு தான், நான் எதுவுமே பேசாம இருந்தேன்"

"அவர் அப்படி இல்லன்னு நினைக்கிறீங்களா?"

"ஆமாம். அவர் உண்மையிலேயே நம்ம மேல அக்கறையோட இருக்கிறதா எனக்கு தோணல. அப்படி அவருக்கு அக்கறை இருந்திருந்தா, டாக்டரை எப்பவோ கையும் களவுமா பிடிச்சிருப்பாரு. ஆனா நம்ம வீட்டுக்கு வந்த உடனேயே ஆழ்வி அதை செஞ்சுட்டா"

"அதை செஞ்சது ஆழ்வி இல்ல, குரு"

"நான் அதை நம்பல"

"ஏன் பாட்டி?"

"நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு. நீயும் தானே அவங்க கூட மாமல்லபுரம் போயிருந்த?"

"ஆமாம்"

"அவங்க ரெண்டு பேரும், அங்க நம்ம இன்னுவோட மருந்தை பத்தி பேசினதை நீ கேட்டியா?"

இல்லை என்று யோசனையுடன் தலையசைத்தாள் பார்கவி.

"நல்லா யோசிச்சு பதில் சொல்லு"

"ஆழ்வி அன்னைக்கு முழுக்க அண்ணன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவே திணறிக்கிட்டு இருந்தா. ஒழுங்கா சாப்பிட கூட அவளுக்கு நேரம் கிடைக்கல"

"இப்போ உன் பதில் என்ன?"

"ஆமாம். மாமல்லபுரம் போனப்போ, அவ அந்த மருந்தை பத்தி குரு கிட்ட பேசினதா சொன்னா... ஆனா, பேசல"

"மாப்பிள்ளையை நேரடியா எதிர்க்க அவ விரும்பல. அதனால தான், அதை குரு மூலமா செய்றான்னு எனக்கு தோணுது"

நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)Onde histórias criam vida. Descubra agora