Chapter 14

1.9K 87 27
                                    

மெதுவாக உள்ள வந்தவள் நிமிர்ந்து அவனைப் பாராமல் கையில் இருந்த பால் சொம்பை அழுத்திப் பிடித்துக்கொண்டு நின்றாள் யாழினி.சில நிமிடங்கள் கரைந்தும் அமைதியாகவே இருக்க,சற்று தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். கட்டிலில் அமர்ந்து கொண்டு ருத்ரன் அவளையே ஆழமாக பார்த்துக்கொண்டிருக்க, அதை தாங்காது மீண்டும் தலை குனிந்தாள் யாழினி.அவன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து நகர நினைத்தாலும், கால்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தது. அவளுக்கு மிக அருகில் ருத்ரன் வந்து நிற்க,இதயம் தாறுமாறாக துடித்தது யாழினிக்கு.மெதுவாக அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கியவன்,அவள் நெற்றியில் விழுந்த முடிக்கற்றை காதுமடல்களுக்கு பின்னால் தள்ளி விட்டு முகத்திற்கு நெருக்கமாக வந்தான். அவனின் தொடுகையில் சிலிர்த்து கண்களை மூடிக்கொண்டாள் யாழினி. எதிர்ப்பார்த்து காத்திருந்தவள் அவனிடமிருந்து எந்த அசைவும் வராது போகவே கண்களை திறந்து பார்த்தாள்.

கட்டிலில் கைகளை தலைக்குமேல் வைத்துக்கொண்டு ஒய்யாரமாக படுத்துக்கொண்டு அவளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தான் ருத்ரன். கோபத்தில் மூக்கு சிவக்க வேகமாக அவனிடம் சென்றவள், இடுப்பில் இரு கைகளை வைத்துக்கொண்டு அவனையே முறைத்தாள். இதற்கு மேல் முடியாது என்பது போல் ருத்ரன் வாய்விட்டுச் சிரிக்க, அவன் மேல் பாய்ந்து இரண்டு கைகளாலும் மாறி மாறி அடிக்க துவங்கினாள் யாழினி. சிரித்துக்கொண்டே சற்று நேரம் அதை வாங்கிக்கொண்டவன், போதும் என்பது போல் அவளது கைகளை பிடித்து தடுத்து அவளை தனக்கு கீழே கொண்டு வந்தான். அவனது சூடான மூச்சு காத்து முகத்தின் மீது விழ, சற்று நேரம் ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த இதயம் மீண்டும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல் ஓட துவங்கியது.

அதற்கு மேல் தாங்காது என்று அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளியவள், ஜன்னல் அருகில் சென்று நின்றுக்கொண்டாள். பூனை நடைப்போட்டு அவள் அருகில் சென்று பின்னிருந்து  இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ருத்ரன். மெதுவாக அவன் புறம் திரும்பியவள், சற்று கால்களை உயர்த்தி அவனது நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அவன் நெஞ்சில் புதைந்து கொள்ள, இன்னும் அதிகமாக இறுக்கி கட்டிக்கொண்டான். அந்த நிமிடங்களை ரசித்துக் கொண்டு  இருவரும் சிறிது நேரம் அப்படியே இருக்க, யாழினியின் முகத்தைக் கைகளில் ஏந்தி அவளது கண்களை ஆழமாக பார்த்தான். இருவரது கண்களும் இரண்டறக் கலக்க, அவளை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு கட்டிலில் சென்று அமர்ந்து அவளையும் தன் மடி மீது உட்கார வைத்தான்.

அவனுக்கு வலிக்கும் என்று நினைத்து யாழினி எழுந்திருக்க, அவளை  மீண்டும் இழுத்து உட்கார வைத்து இடையை சுற்றி இறுக்கி கொண்டான்.

“மாமா, வலிக்கப் போகிறது உங்களுக்கு”
“அடியே மக்கு பொண்டாட்டி, பருத்தி மூட்டையை என் மேல் வைத்தது போல் உள்ளதடி அழகி”
“அட போங்க மாமா”
“என்னைப் பார் கண்ணம்மா”
“என்ன மாமா?”
“உன்னை அளவிட முடியாத அளவுக்கு காதலிக்கிறேன் கண்ணம்மா” என்று கூறி அவள் நெற்றியில் இதழ் பதிக்க
“நானும் உங்களை வார்த்தைகளில் அடக்க முடியாத அளவுக்கு காதலிக்கிறேன் ருத்ரா” என்று கூறியவள் அவனது இதழில் தன் இதழ்களை பதித்தாள்.

அவள் இதழ்கள் பட்டதும் மின்சாரம் தாக்க, அவள் இதழ்களுக்குள் ஆழமாக சென்று தன் காதல் தேனை தேடினான். சில நிமிடங்கள் கரைய, யாழினிக்கு சுவாசிக்க காற்று தேவைப்பட, அவனிடமிருந்து விலகினாள். உதடுகள் துடி துடிக்க வேர்வை துளிகள் நிரம்பி இருந்த அவளது முகம் சுண்டி இழுக்க, அவளது கண்கள்,மூக்கு,கன்னம் என்று இதழ் ஊர்வலம் நடத்தினான். இறுதியில் மீண்டும் அவளது பூவிதழ்களில் தன் இதழ்களை புதைத்து கொண்டான்.

பல நிமிடங்கள் கரைய அவள் சுவாசிக்க விடுவித்தவன், அவளது காது மடல்களில் முத்தமிட்டு கழுத்து வளைவில் முகம் புதைக்க, உடல் சிலிர்த்து அவனை இறுக கட்டிக்கொண்டாள் யாழினி. அவனது விரல்கள் உடலில் அத்துமீறி விளையாட, உடல் சூடேற கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவள் மேல் படர்நதவன், அவளுள் ஆழமாக புதைந்து தன் காதலைத் தேடினான். ஒரு மனம் இருவுயிராக இருந்தவர்கள், இன்று ஒரு உடல் இருவுயிராக மாறினார்கள்.அக்னி சாட்சியாக அவளை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டவன், நிலவின் சாட்சியாக தன்னவளாக்கி கொண்டான்!

உணர்வுகள் அடங்க மறுத்தாலும், மூன்று நாட்கள் திருமண அசதியில் யாழினி சற்று களைப்பு அடைய, யாழினியிடம் இருந்து விலகி அவளைத் தன் மீது சாய்த்து கொண்டு தட்டிக்கொடுத்து தூங்க வைத்தான் ருத்ரன். அவளின் நலம்  பற்றியே எப்போதும் யோசித்து செயல்படும் அவனது அன்பில் நெகிழ்ந்து போனாள்.
வெளிப்படையாக வெளிக்காட்டாத அவனது ஆழமான காதலில் கரைய விரும்பி  அவனிடம் நன்றாக ஒன்றி கொள்ள, சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள். அயர்ந்து உறங்கும் தன்னவளையே பார்த்துக்கொண்டிருந்த ருத்ரனுக்கும் கண்கள் சொக்க, அவளை இறுக அணைத்து தன் கை வளைவில் வைத்துக்கொண்டு உறங்கிப் போனான்!

தோயும் மது நீ எனக்கு(Edited)حيث تعيش القصص. اكتشف الآن