Chapter 25

1.3K 67 25
                                    

கோபத்தில் சாதனாவை அடிக்க லீனா கை ஓங்க, ஆதி அவளது கையைப் பற்றி தடுத்து, "உன் மீது தவறு இருக்கும் போது, அவளை எதற்கு அடிக்க செல்கிறாய் லீனா? எதையும் செய்யும் முன் யோசித்து செய், இல்லை என்றால் பின்விளைவுகளை நீ தான் சந்திக்க வேண்டும்!" என்று மறைமுகமாக எச்சரித்தான். தன் திட்டம் தனக்கே வினையாக முடிந்ததாலும், தன்னை ஆதி கண்டுபிடித்து விட்டாலும், அவனது எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அலட்சியமாக திமிருடன் அங்கிருந்து சென்றாள் லீனா.

சற்று பயந்து போயிருந்தாலும், ஆதியை கடவுள் அளவுக்கு சாதனா பார்த்து வைக்க, தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் ஆதி. லீனாவிடம் கோபப்பட்டு பேசியதால் தலைவலி வந்து விட்டதோ என்று எண்ணி, "அண்ணா, என்னவாயிற்று? தலை வலிக்கிறதா?" என்று பதற்றமாக கேட்டாள் சாதனா.

"என்னைப் பார்த்தால் எப்படி தெரிகிறது உனக்கு" என்று ஆதி தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க

"தெரியாத இடத்தில் எனக்கு உதவி செய்வதற்காகவே கடவுள் அனுப்பி வைத்த அண்ணா நீங்கள்" என்று சாதனா அன்பைப் பொழிந்தாள்.🤣

"ஆமாம் கடவுளுக்கு வேறு வேலை இல்லை, எந்தப் பெண்ணுக்கு எந்த பையனை அண்ணனாக அனுப்பி வைக்கலாம் என்று தான் யோசித்து கொண்டிருக்கிறார்!"😒 என்று ஆதி கிண்டலடிக்க, சாதனாவுக்கு இதோ வந்து விடுவேன் என்று கண்களில் கண்ணீர் நிறைந்து விட, அதைப் பார்த்து பதறி விட்டான் ஆதி.

" என்னம்மா நீ, எதற்கு எடுத்தாலும் அழுகிறாய், நான் விளையாட்டுக்கு சொன்னேன் சாதனா, பார்க்கிறவர்கள் என்னை வில்லனாக நினைத்து தர்ம அடி கொடுக்கப் போகிறார்கள் " என்று பயந்தது போல் நடிக்க, வாய் விட்டு சிரித்தாள் சாதனா.

அவள் சிரிப்பதை வாஞ்சையுடன் பார்த்தவன், அப்பாவியாக எதையும் மறைக்க தெரியாதவளாக இருப்பவளை அண்ணனாக இருந்து காப்பது தன் கடமை என்று எண்ணினான் ஆதி.

"லீனாவிடம் தள்ளியே இரு சாதனா, தேவையற்ற பேச்சு வேண்டாம்"

தோயும் மது நீ எனக்கு(Edited)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ