'அவனும் எத்தனை வருடங்களுக்குத் தான் இந்தக் குடும்பத்துக்காவே உழைப்பான்? அவனுக்கும் கல்யாணம் காட்சி என்று ஆக வேண்டாமா?' என்பது அவர் எண்ணம். எனவே மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சிகள் தொடங்கிவிட்டார்.
சர்வேஸ்வரனுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை என்றாலும், அம்மாவிடம் அதைச் சொல்லிக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்கள் பாட்டுக்கு ஏதாவது செய்யட்டும் என்று விட்டுவிட்டார். அன்னபூரணியின் முயற்சியும் வேண்டுதலும் வீண்போகவில்லை. கோயில்கள், தரகர்கள், குழுக்கள், சமுதாயக் கூடங்கள் என்று எங்கெல்லாமோ பேசி, கடைசியாக திருநெல்வேலி காயர் மில் (coir mill) ஓனர் ஒருவரின் பெண்ணை சர்வேஸ்வரனுக்குப் பேசி முடித்துவிட்டார் அவர்.
மகனை அழைத்துக்கொண்டு ஒருநாள் திருநெல்வேலிக்குச் சென்று பெண்பார்க்கச் சென்றனர்.
மனமின்றி வந்தபோதிலும், பெண்ணைப் பார்த்ததும் சர்வேஸ்வரனுக்குப் பிடித்துப்போக, அடுத்த வாரமே மிக விமரிசையாக அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தன. பத்திரிக்கைகள் அச்சடிக்க, மண்டபம் பார்க்க எனக் குடும்பத்தினர் மும்முரமாக இருக்க, விஷ்வா மட்டும் எந்த வேலையும் இல்லாமல் இருந்தான். அவனுக்குத்தான் அவனது மஹிமா இருந்தாளே!