47

1.7K 85 7
                                    

காரிருள்

அவளது தேர்வுகள் முடிந்த உற்சாகத்தில் வெளியே செல்லக் கிளம்பினர் இருவரும். அவளைக் கைப்பிடித்து அழைத்து வாசல்வரை சென்றிருப்பான் அவன், கதவைத் திறந்ததும் ஒரு இரும்பு ராட் ஒன்று அவன் நெற்றிப்பொட்டைப் பதம்பார்த்தது. யார் அடித்தார், என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் தலைசுற்றி கைகால்கள் தொய்ந்து வேரற்ற மரம்போல் தரையில் விழுந்தான் விஷ்வா.

"விஷ்வா!!!"

அவன் விழுவதைக் கண்டு அதிச்சியில் அலறினாள் மஹிமா. அவனைத் தாங்கிப் பிடிக்கமுடியாமல் தானும் கீழே விழுந்தாள் அவள். யார் அவனை அடித்தது என்று நிமிர்ந்து பார்த்தாள்.

அவனால் அடிக்கப்பட்ட, காவலில் ஒப்படைக்கப்பட்ட வெள்ளைக்கார மாணவர்கள் நால்வரும் நின்றிருந்தனர்.

"Didn't expect us here, b****?"

"Yeah..see her face, pathetic!"

அவர்கள் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைய, அவள் முகம் பயத்தில் வெளிறியது.

'விஷ்வா.. விஷ்வா..' சன்னமான குரலில் அவனை எழுப்ப முயன்றாள் அவள். நெற்றியில் அடிபட்ட இடத்தில் இருந்து இரத்தம் வழிந்துகொண்டே இருந்தது. அவன் கையைப் பிடித்துப் பார்த்தாள் அவள். நாடித்துடிப்பு மிக மெலிதாக இருந்தது.

அவளது பயத்தை ரசித்தவாறே அவர்கள் முன்னேறி வந்தார்கள். உள்ளே வந்து கதவைத் தாளிட்டனர். அவனைத் தாக்கிய கம்பியால் அவளையும் கீழே தள்ளினர்.

"Help!! Help!!"

ம்ஹூம். அவளது அவலக்குரல்கள் யாருக்கும் கேட்டதாகத் தெரியவில்லை.

"Please... leave us alone! I won't step in your way another time. We are leaving the country" அவர்களிடம் கண்களில் நீர்மல்கக் கெஞ்சினான் அவள். அதுவும் எடுபட்டதாகத் தெரியவில்லை.

கம்பியைக் கீழே போட்டுவிட்டு அவள் கூந்தலைப் பிடித்து அப்படியே மேலே தூக்கி சுவரோடு அவளைத் தள்ளினான் ஒருவன்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now