34

1.8K 87 3
                                        

வானாகி நின்றாய்

அந்தப் பேருந்திலிருந்து இருவரும் இறங்கியபோது, விஷ்வாவின் மனம் யோசனையில் மூழ்கியிருந்தது.

அவள் தன் தோளில் சாய்ந்து சொன்ன வார்த்தை, அந்தக் குரல், அதிலிருந்த ஏக்கம்...

மஹிமா அது எதுவும் நினைவின்றி நடந்துகொண்டிருந்தாள். அவள்தான் அழுகையின் உத்வேகத்தில் அதைக் கேட்டுவிட்டு, பின் உடனே தூங்கிவிட்டாளே!

Muswell Hill பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, தன் வீடு இருக்கும் Coniston streetஐ நோக்கி நடந்தாள் மஹிமா. பின்தொடர்ந்து விஷ்வா வந்தான்.

"விஷ்வா நீ லஞ்ச் சாப்ட்டியா? பசிக்குதா?"

தன் கேள்விக்கு பதில் வராததால் அவள் திரும்பினாள். ஏதோ யோசனையில் லயித்திருந்தான் அவன். அவன் முகத்தின் முன் கையசைத்து, அவனை சுயநினைவுக்குக் கொண்டுவந்தாள் அவள்.

"ஹே... என்னாச்சு?"

"ம்... என்ன கேட்ட?"

"சாப்டலாமான்னு கேட்டேன்"

"ஓ... சாப்டலாமே. எங்க?"

"நேரி என்னை நேத்து ஒரு ரெஸ்ட்டாரண்ட்டுக்கு கூட்டிட்டுப் போனான். டார்ச்சீ. அது சூப்பரா இருக்கும். பக்கத்துல தான் இருக்கு. அங்கயே போலாமா?"

சட்டென நின்றான் விஷ்வா.
"யாரு நேரி?"

அவன் குரலில் தொனித்த சிறு கோபமும் சந்தேகமும் மஹிமாவுக்குத் தெரிந்தது. அவள் இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

"யாரா இருந்தா என்ன?"

விஷ்வா சமாளித்து,
"இல்ல அதுக்குள்ள ஃப்ரெண்ட் பிடிச்சிட்டயான்னு கேட்டேன்..." என்றான்.

"ஆமா... நல்ல டைப். எனக்கு ரெஸ்ட்டாரண்ட்ல ஒரு சர்ப்ரைஸ் கூட தந்தான் தெரியுமா? Wow man...that was awesome!!"

அவள் பேசிக்கொண்டே போக, விஷ்வாவின் முகம் சுருங்கியது.

மெய்மறந்து நின்றேனேحيث تعيش القصص. اكتشف الآن