52

4.7K 107 54
                                    

EPILOGUE

***********************
விஷ்வேஸ்வரன்
&
மஹிமா
***********************

என்ற ஆளுயர வரவேற்புப் பலகை முத்தாய்ப்பாக மண்டப வாசலில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அவனும் அவளும் சிரித்தவாறு நின்றிருந்தனர்.

ஆம். ஊரே மெச்சும்படி அவர்களது திருமணம் அன்று நடந்துகொண்டிருந்தது. இருவீட்டாரிடமும் சம்மதம் பெற்ற அவர்களது காதல், இன்று சமூகத்திலும் அங்கீகரிக்கப்பட இருந்தது திருமணமாய்.

கருநீல பனாரஸ் பட்டில் அவள் தேவதையாக ஜொலிக்க, பட்டு வேஷ்டி சட்டையில் அவனும் ஆணழகனாக ஒளிர்ந்தான். மணமேடையில் ஐயர் மந்திரங்கள் சொல்லச் சொல்ல அவனும் திருப்பிச் சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

அண்ணனும் அண்ணியும் அருகில் நின்றிருந்தனர். முகில் அண்ணியின் கையில் இருந்தான். தன் மழலை மொழியில் ஏதோ பேசி தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருந்தான்.

மண்டபத்திலேயே பரபரப்பாக சுற்றிக்கொண்டு இருந்தவன் ஜோஷி தான்! சாப்பாட்டுக் கூடத்திற்கும், வாசலுக்கும் மணவறைக்கும் ஸ்டோர்ரூமுக்கும் அலைந்து கொண்டிருந்தவனைப் பார்த்து சிரிப்பு வந்தது அவனுக்கு.

"நல்ல நேரம் தொடங்கியாச்சு, பொண்ணை அழைச்சுட்டு வாங்க" என்று அவர் ஆணையிட, தோழிகள் வேணியும் ஜபீனாவும் அவளை அழைத்து வந்தனர்.

மெல்ல அடியெடுத்து வைத்து நிலம்பார்த்தபடி அவள் நடந்து வர, அவளை முதன்முதலாகப் பள்ளியில் கண்டது முதல் கல்லூரியில், விமான நிலையத்தில், லண்டன் வீட்டில் என அத்தனை முகங்களும் நினைவுக்கு வந்தது அவனுக்கு. அப்போதெல்லாம் தென்படாத பெண்மையின் பேரழகு இன்று கல்யாணக் கோலத்தில் அவளிடம் தெரிந்தது. குழந்தை முகம் எல்லாம் மறைந்து, அவள் முழுப் பெண்ணாக மாறியிருந்ததுகண்டு வியந்தான் அவன்.

அப்போது அவளும் அவனை நிமிர்ந்து பார்க்க, கண்கள் நான்கும் சந்தித்தன. ஒருகணம் அங்கிருந்த அனைவரும் காணாமல் போயினர் அவர்களுக்கு. இந்த உலகத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இருப்பதுபோல் தோன்றியது அவளுக்கு. அவன் கண்களில் வழியும் காதல் அவளை வேறேதோ உலகத்திற்குத் தூக்கிச் சென்றது. ஐயர் அழைக்கவும் சுயநினைவு வந்தவள், மெல்லச் சென்று அவையை வணங்கிவிட்டு அவனருகில், மணவறையில் அமர்ந்தாள்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now