வானம்
விஷ்வா அண்ணனிடம் ஒடினான். அண்ணியிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார் அவர். அவர்களைப் பிரிக்கக் கஷ்டமாக இருந்தாலும் வேறு வழியின்றி, தைரியத்தைத் திரட்டிக்கொண்டு
"அண்ணா" என்றழைத்தான்.அவர் நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
"வா விஷ்வா"
"வாங்க கொழுந்தனாரே"
"அண்ணா, அண்ணி, அவ லண்டன் கிளம்பறாளாம்!"
யாரென்று அவனது பதற்றத்தில் புரிந்தது இருவருக்கும். சர்வேஸ்வரன் முகம் இறுக்கமானது.
"எதுக்காக?"
"என்னை மறக்கவாம்"
"அச்சோ.. இப்ப என்ன பண்றது?"
அண்ணியின் குரலில் தெரிந்த கரிசனம் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை தந்தது."நானும் போறேன் அண்ணி"
சர்வேஸ்வரன் சிடுசிடுத்தார்.
"டேய்! என்ன விளையாடுறியா? ஏதோ பக்கத்து ஊருக்குப் போற மாதிரி, அவ போனா இவரும் போவாராம்"
"அண்ணா ப்ளீஸ்... அண்ணி நீங்களாச்சும்..."
"விஷ்வா, நீங்க வேற எது கேட்டிருந்தாலும் நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணிருப்பேன். நீங்க இன்னும் சின்னக் குழந்தை மாதிரி இப்டி இருக்கீங்களே!"
"டேய்... இங்க ஒரு வருஷமா தீர்க்க முடியாத சண்டைய, லண்டன்ல வச்சுத் தீர்க்கப் போறயா? இதெல்லாம் நடக்குமான்னு யோசிடா..."
"....."
"உன்னை ஆரம்பத்துலயே கொஞ்சம் கண்டிச்சு வளர்த்தியிருக்கணும். ஓவர் செல்லம் கொடுத்து வளர்த்ததால நீ என்ன சொன்னாலும் நாங்க செய்வோம்ணு உனக்குத் திமிராகிப் போச்சு"
"அப்டிலாம் சொல்லாதீங்க...பாவம் அவர் மனசு கஷ்டப்படும். விஷ்வா, நீங்களே யோசிங்க, லண்டனுக்குப் போக, விசா வேணும். விசா வாங்க, எதாவது valid reason வேணும். நீங்க என்ன சொல்லி வாங்குவீங்க? இது என்ன சினிமாவா, காதலிய பார்க்க போறேன்னு சொன்னா சிரிச்சுகிட்டே விசா தர்றதுக்கு?"

BẠN ĐANG ĐỌC
மெய்மறந்து நின்றேனே
Lãng mạnபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.