காதல் -42

795 43 20
                                    

ஆண்கள் அனைவரும் யோசித்தவாறு அமர்ந்திருக்க... அப்போது... தத்தி தத்தி நடந்து வந்தது ஒரு வெண்புறா... அதை கண்ட லக்ஷ்மனன்... அதை தூக்கி தோளில் நிற்க வைத்துவிட்டு அதன் காலில் கட்டப்பட்டிருந்த செய்தியை எடுக்க.... அதிலோ...

அன்புள்ள லக்ஷ்மனனிற்கு,
தங்கள் நந்தி எழுதிக் கொள்வது.... விரைவில் சந்திக்கப்போகிறோம்.... இங்கு பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது... விரைவில் வாருங்கள்... என முடிந்திருந்தது...

நந்தி லக்ஷ்மனனின் காதலி....இருவரும் சில வருடங்களாய் காதலித்து வருகின்றனர்... இவர்கள் ஷேஷ்வமலையில் இருந்து அனைவரையும் பாதுகாப்பர்... அங்கு நாயகிகள் பாதுகாப்பர்... அங்கிருந்து அதிசயத்தின் அதிசயமாய் என்றாவது கருப்புப்புறாவில் தூது வரும்.... வெண்புறாவில் மாதத்திற்கு பல முறை வந்துவிடும்... ஆனால் இவர்கள் தான் கோவன்கள் சஹாத்திய வம்ச சூரர்கள் என்றும்... அவர்கள் தான் நாகனிகள்.... யாளிவம்ச வீராங்கனைகள் என்றும் ஒருவருக்கொருவரே தெரியாது.....

விஷ்னு : இக்கடிதம் வைத்து பார்த்தால்.... தேவன்கள் மூவரும் பணியில் இறங்கிவிட்டனர் போலும்.... நாம் இன்றே கிளம்புவது தான் சரியாக அமையும்...

ஷிவன் : மித்ரா.... உடனே கூட்டத்தை கூட்டு.... நாங்கள் காட்டிற்கு சென்று வருகிறோம்... என கூறிவிட்டு நகர...

கூட்டம் கூடும் ஏற்பாடு தொடங்க... கோவன்கள் மூவரும் யாரும் அறியாமல் காட்டிற்குள் நுழைந்தனர்... ஒரு குறிப்பிட்ட எல்லையை கடந்ததும்.... மூவரும் காற்றோடு காற்றாய் கண்ணிற்கு அகப்படாமல் எங்கோ மறைந்தனர்....

தன் அறையில் படுத்திருந்த உக்ரதேவன் (விகாஷ்) யோகனாவின் சினம் பொங்கும் வாக்கியங்களில் எழுந்தமர்ந்தான்....

யோகனா : என்ன நடக்கிறது பிரபு... தங்களை மணமுடிக்க ஏன் ஒத்துழைத்தேன் என்பதை மறந்தீரா.... எமக்கு சந்திரன் கிடைக்காததால்.... அவனை அழிக்க தானே மணமுடித்தேன்... ஆனால் நீங்கள் ஒன்றும் செய்வதை போல் தெரியவில்லை....

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Where stories live. Discover now