காதல்-66

600 51 70
                                    

திடீரென கேட்ட உருமலில் அனைவரும் திடுக்கிட்டு திரும்பிட.... அனைவரின் பின்.... தங்கள் விழிகள் இரண்டும் கருமை தத்தெடுத்திட..... கால்களை நிலத்தில் உரசி.... கோர பற்களை தீட்டி.... சுயநினைவை இழந்து அசுர வேகத்தில் இரையை தேடி வெறிகொண்டு வேதபுரத்தை நோக்கி ஓடியது சிம்மயாளிகள்....

முதலில் புரியாது அதிர்ச்சியில் விழித்த நாயகர்களுக்கு விரைவில் இது கோராவின் வேலை என புரிய.... வேதபுரத்தில் அது நுழைய கூடாதென அதை தடுக்க விரைந்தனர்....

ஏனெனில் சிம்மயாளிகள் கிராமத்திற்குள் இவ்வெரியுடன் நுழைந்தால் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.... அது மட்டுமல்லாம் இத்துனை பெரிய விலங்கு உலகில் வாழ்வது தெரிந்தால் அது பணத்திற்காக பொருளாய் மாற்றப்படும் என்பதற்காகவே... மற்ற நாயகன்கள் அவர்களின் யானையாளியை கொண்டு அதை தடுக்க விரைய.... திடீரென எங்கிருந்தோ வந்த கருப்பு உருவங்கள் யானையாளிகளை தடுக்க.... யானையாளிகளோ அவைகளை மிதித்து விட்டு அவசரத்தில் விரைந்தோட... மீண்டும் அவ்வுருவங்கள் யானையாளிகளை தடுக்க..... ஆத்திரமடைந்த அஷ்வன்த் மற்றும் முகில் மற்றவர்களை முன்னேற கூறிவிட்டு... அவர்கள் மாத்திரம் அவ்வுருவங்களை அவர்களின் யாளிகள் கொண்டு அழிக்க முயன்றனர்..... அதி வேகமாய் சென்ற யானையாளிகள் சிம்மயாளிகளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல்.... நாகனிகளின் மாயையில் சிம்மயாளிகளின் முன் சட்டென நிறுத்தப்பட.... ஓடோடி வந்த சிம்மயாளிகள் யானையாளிகளின் தந்தத்தில் மோதி நகர இயலாமல்.... இருக்க.... ஒவ்வொரு சிம்மயாளியையும்... இரு இரு யானையாளிகள் தடுத்து பிடித்திருக்க..... மெல்ல மெல்ல.... சிம்மயாளிகள் தங்களின் தலையை தந்தத்தில் மோதி.... தள்ளிக் கொண்டு முன்னேற முயல..... மேல் அமர்ந்திருந்த நாயகன்கள் வேகமெடுத்தனர்... ஓரிரு நொடிகள் தாக்கு பிடித்த யானைனாளிகளை.... சிம்மயாளிகள் மூன்றும்..... சட்டென இடித்து.... தூர வீசியது.... இதை எதிர்பார்க்காத அனைவரும் பயங்கரமாய் அலர.... நாயகன்கள் யானையாளிகளிலிருந்து கீழ் குதிக்க.... யானையாளிகள் கீழே விழும் முன்னே.... அதை கடினப்பட்டு தங்களின் மாயையில் தாங்கி பத்திரமாய் கீழ் இறக்கினர் நாகனிகள்.....

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Where stories live. Discover now