சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் நோக்கி அந்தி சாயும் நேரத்தில் தங்கள் பயணத்தைத் துவங்கினர் அம்மூவரும்..
விசாகன் காரோட்டியாய் வண்டியை சீரான வேகத்தில் இயக்கிக் கொண்டிருக்க, உதயனோ சாலையின் ஓரங்களில் தன் பார்வையைச் செலுத்தியிருந்தான்.. அவன் மனம் இன்னும் மட்டுப்படவில்லை.. தன் தாய்க்கு அவன் தந்தை செய்த பாவமே மனதை ஆட்டிப்படைக்க,
வாசுவின் மீது வெறுப்பை வளர்த்திக் கொண்டிருந்தான் அவன்.
அவனிருக்கும் நிலையில் வண்டி ஓட்டினால் தங்களை பரலோகத்திற்குத் தான் அழைத்துச் செல்வான் என்கிற காரணத்தால் விசாகனே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் கூகுள் ஆண்டவரின் உதவியால்.
அவன் நினைத்திருந்தால் உத்ராவை தவிர்த்து பயணத்தை தொடர்ந்திருக்க முடியும். ஆனால் அவளை அழைத்துச் செல்ல சம்மதித்திற்கான காரணத்தை அவனே அறிவான்.
விசாகனுக்கு வாசுவை நேரில் கண்டதாலோ என்னவோ அவனது கோபம் மட்டுப் பட்டிருந்தது.. அதற்காக அவரை மன்னித்து விட்டான் என்றில்லை.. அவர்பக்க நியாயத்தையும் கேட்டே எதையும் முடிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அவர் கொலைகாரனாக இருந்திருந்தால் ஒற்றை விரலால் தடுத்த துப்பாக்கியை சுழற்றி அவனையே சுட்டிருக்கலாம் தேவா. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லையே...
பின்னிருக்கையில் அமர்ந்திருந்த உத்ராவின் நினைவோ வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. அவளுக்கு ரோகிணியை அவ்வளவு பிடிக்கும். ஆசிரமத்தில் வளர்ந்தவளுக்கு உற்ற தோழியாக, தாயாக திகழ்ந்தவள் ரோகிணி.. தன்னை நேரில் சந்தித்தது இல்லையென்றாலும் அலைபேசியிலேயே அவளுடன் உரையாடி தன்னுடைய நன்மதிப்பை பெற்றவர் வாசுதேவர்.
அவர்கள் உயிருக்கு ஆபத்து என்றதும் அவளும் ஆடித்தான் போனாள். என்னதான் ஈஸ்வரி நல்லவராக இருந்தாலும் தேவா அவர் சொன்னது போல தவறிழைத்திருக்க மாட்டார் என்பதை உறுதியாக நம்பினாள்.
அவர்களை பார்ப்பதற்காக எந்த
எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அதிகம் பழக்கமில்லாத இரண்டு ஆண்களுடன் தன் பயணத்தை தொடர்கிறாள் என்பது அவளுக்கும் தெரியவில்லை. தன்னிடம் கண்ணியமான முறையில் நடந்து கொண்ட உதயனுக்காகவா..இல்லை தன்னை வேறொருவராய் விலக்கி வைத்து பார்க்காது தன்னவர்கள் போல நடத்தும் விசாகனுக்காகவா என்று கேட்ட மனசாட்சியின் கேள்விக்கு, நிச்சயம் விசாகனுக்காக இருக்காது என அவள் அடித்துச் சொல்ல, அவள் பார்வை உதயனிடத்தில் சென்றது.
ВЫ ЧИТАЕТЕ
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Документальная прозаபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
