29.என்னை மறந்தாயோ கண்ணம்மா

1.4K 91 62
                                        

சண்முகத்தைக் கூட்டிக் கொண்டு வாசுவும் உதயனும்  கலந்தாய்வுக்கு சென்றிருக்க, இங்கே பாஹீ விசாகனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்..

" அந்த மனுசன் நீங்க என்ன சொன்னாலும் கேட்பாருன்னு..அவரோட பாசத்தை அசைச்சுப் பார்க்க முடிவெடுத்திட்டீங்க..அப்படிதான..

என்னடா தெரியும் அவரப் பத்தி..

வேலைக் காரன் வேலைக் காரன்னு என் காது படவே எத்தனை முறை அவமானப் படுத்திருப்பாங்க தெரியுமா அவர.. இப்போ அவர்மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்ச பிறகு மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா..

உனக்கென்ன பிரச்சனை.. சொத்து சரிசமமா பிரிக்கனும் அதான..

பிரிச்சிக் கொடுங்க..ஆனா அதுக்கு பிறகு எங்க வீட்டுப் பக்கம் யாரும் வரக் கூடாது அவ்ளோதான்..புரிஞ்சுதா..

ரோகிணிய வெச்சு பிளாக்மெயில் பண்ணியாமே.. இதை அவர் வேணா உங்க மேல கண் மூடித் தனமா நம்பிக்கை வெச்சிருக்கறதால நம்பலாம்..ஆனா நான் நம்ப மாட்டேன்.. "

பெண் சிங்கமாய் அவர் முழங்கிக் கொண்டிருக்க தலை குனிந்து நின்று கொண்டிருந்தான் விச்சு..

" நான் ரோகிணிய தூக்கி வளர்க்காம இருந்துருக்கலாம்.. ஆனா ஒரு அம்மாவா அவ மனச புரிஞ்சிக்க முடியும்.. அவருக்குத் தான் தன் பொண்ணு சின்னதா முகம் சுளுச்சாலும் அது பெரிசா தெரியும்..எனக்கு அப்படி இல்ல..தன்னை பிடிக்கலன்னு கல்யாண மாப்பிள்ளை சொல்றான்னா அவ எந்தளவுக்கு துடிச்சிருக்கனும்னு எனக்குத் தெரியும் " என்றதும் புசுபுசுவென்று கோபத்தோடு ரோகிணியை அவன் பார்க்க, அவள் அவனைப் பார்த்து கேவலமாய் இளித்து வைத்தாள்..

" இப்போ சொல்லுடா..இந்த சொத்து விசயத்தை தவிர, வாசு உனக்கும் உதயாவுக்கும் என்ன வேறுபாடு காட்டுனாருன்னு " கைக்கட்டி அவர் கேட்ட விதத்தில் உள்ளுக்குள் பயப்பந்து உருண்டு விழுந்தது..

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ