பருவதம் தனது மருமகளின் வரவினை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தார். ரோகிணி விசயத்தில் எப்படியோ, ஆனால் பாஹீயிடம் அவருக்கு சற்று பயம் கலந்த பாசம்.. மாணிக்கத்தின் மகள் என்கிறதாலயே பாஹீயின் முன் பம்மிக் கொண்டுதான் இருப்பார். சரியான பாட்டாளி..மாடிவீட்டு மகராணி அவரது ஓட்டு வீட்டில் சிரமப்படாமல் இருக்க, ஓடி ஓடி அனைத்து வேலைகளையும் தானே செய்துவிடுவார்.
பாஹீயும் அவரோடு நன்றான பழகினாலும் பருவதத்தின் இந்த பயத்தினை போக்க முடிந்ததில்லை.. வாசு குழந்தையோடு ஊரை விட்டு கிளம்ப அழைத்ததும் பாஹீக்கு செய்யும் துரோகமாகவே அதனைக் கருதினார்.ஆனால் மகனை எதிர்த்துக் கொண்டு மருமகளுக்காய் பரிந்து பேசும் அளவிற்கு துணிச்சல் அவரிடம் இல்லை.. மருமகளை விட தான் பெற்ற மகன் தான் முக்கியம்... அவனுடன்தான் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார்..ஆனால் அவர் மனதிலும் தன் மகன் மனைவி பிள்ளைகளோடு ஒற்றுமையாக வாழ்வதைப் பார்த்துவிட்டே கண் மூட வேண்டும் என ஆசை கொண்டிருக்க, அதன் பலனாய் இருபத்தி மூன்று வருடங்கள் கழித்து தன் மருமகள் வந்து கொண்டிருக்கிறாள் என்ற செய்தியில் உச்சி குளிர்ந்து போனார்.
இரவு எட்டு மணிக்கு பெரியகுளத்தை வந்தடைந்தவர்களை உத்ராவை ஆர்த்தி எடுக்கச் சொல்லி உள்ளே அழைத்து வந்தார் பருவதம். பாஹீ தனது மாமியாரின் காலில் விழுந்து மன்னிப்பினைக் கேட்க, அவரை உச்சி முகர்ந்தவர் " என்ற மருமக எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்.. அந்த வாசுப்பய எதும் கோக்குமாக்கு பண்ணிருப்பியான் தாயி. " வாசுவிலிருந்து அனைவரும் அவரை முரைக்கவும் பேச்சை மாற்றி,
ВЫ ЧИТАЕТЕ
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Документальная прозаபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
