வாசுதேவனின் வண்டிச் சத்தம் கேட்டதும் வெளியே வந்தனர் விசாகனும் உதயனும்.. தன் நினைவுகளில் நிறைந்திருந்த கருப்பு வெள்ளைப் படங்கள் வண்ணங்களாய் உருப்பெற்று அவன் எதிரே வந்து கொண்டிருந்தது.. அதனூடே தாயின் நினைவும் வர, தன் மோன நிலையை கலைத்து வாசுதேவரை தன் பார்வையால் சுட்டெரிக்க முயற்சித்தான் உதயன்.
தந்தையின் கண்களிலோ தன் தணயனைப் பார்த்த பிரமிப்பு மட்டுமே இருந்தது.. அவரைக் கண்டதும் வெட்டி எறிந்துவிடும் ஆத்திரத்தில் இருந்தவனோ அவர் பார்வையின் தீட்சண்யத்தை தாங்க இயலாது பார்வையை திருப்பிக் கொண்டான். வாசுதேவன் அவர்களை " உள்ள வாங்க " என்றழைக்க,
அவர் சட்டையைப் பற்ற நினைத்து முன்னேறியவன் அவர் முகம் பார்த்ததும் அவ்வாறு செய்ய முடியாத தன்னையே மனதினுள் திட்டிக் கொண்டு
" என்ன நினைச்சிட்டு இருக்கிங்க நீங்க.. நாங்க உங்க வீட்ல உக்கார்ந்து விருந்து சாப்பிட வந்த மாதிரி உபசரிச்சிட்டு இருக்கிங்க. நான் எங்கம்மாவுக்கு நீங்க பண்ண துரோகத்துக்கு நியாயம் கேட்டு வந்துருக்கேன்" என்றதும் இதுவரை தன் மகனைக் கண்ட ஆனந்தத்தில் இருந்தவருக்கு நிசர்சனம் புரிய, அவர் உதட்டில் இருந்த சிரிப்பு உறைந்தது.
"எல்லா பாவத்தையும் பண்ணிட்டு இப்படி எதோ ஒரு கிராமத்துல நல்லவர் வேசம் போட்டுக்கிட்டு இங்கிருக்கவங்களையும் ஏமாத்திகிட்டு, கட்டுன பொண்டாட்டியும் பெத்த பையனும் எப்படி இருக்காங்கனு கூட கவலைப்படாம நீங்க மட்டும் உங்க பொண்ணோட சந்தோசமா இருக்க எப்படி உங்களால முடியுது...
![](https://img.wattpad.com/cover/225511903-288-k874561.jpg)
KAMU SEDANG MEMBACA
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Nonfiksiபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா