12.என்னை மறந்தாயோ கண்ணம்மா

1.5K 98 44
                                        

வாசு தங்களது கடந்தகாலத்தைக் கூறி முடிக்க, உதயன் தன் தாயின் கோபம்தானா தங்களின் இந்நிலைக்கு காரணம் என வெகுண்டு போய் அங்கிருந்த கல் பெஞ்சில் பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான்.அவன் கண்கள் கண்ணீரைச் சிந்திக் கொண்டிருந்தது.. விசாகனும் கிட்டத்தட்ட அந்நிலையில் தான் இருந்தான்.

உண்மையில் அவனுக்குத் தானே இழப்பு அதிகம்.. சூப்பர் மேனை பற்றி  நினைவு வந்தவனுக்கு தனது தாய் தந்தையைப் பற்றி தோன்றாமல் இருக்குமா?அவனது தயா.. தனது ராஜி, அவள் வயிற்றில் இருந்த ஏஞ்சல்.. பாஹீயின் கோபம் என அனைத்தையுமே நினைவு கொண்டதில் தலை சுற்றுவதைப் போல இருந்தது..

வலியோடு வாசுவைப் பார்க்க, அவனும் விசாகனைத் தான் பார்த்திருந்தான்.. தனது கைகளை நீட்டி அவனை அழைக்க, தாயினைக் கண்ட சேயாய் வாசுவை அணைத்துக் கொண்டவன் " சூப்பர்மேன்.. நீ இருந்தும் எங்கம்மா அப்பாவ காப்பாத்தாம போயிட்டியே.. ஏன் காப்பாத்தல..ஏன் எனைய விட்டுட்டு போன" என இளைஞனாய் இருந்தவன் தனது பாதுகாவலனைக் கண்டபின் சிறுவனாய் மாறி கேட்க,

அவனை குற்ற உணர்ச்சியோடு பார்த்தவர்

" நான் உன்னோட சூப்பர்மேன் கிடையாது விச்சு.. நான் ஒரு கோழை.. சுயநலவாதி.. தன் பொண்டாட்டி நல்லபடியா இருந்தா போதும்னு பயந்து ஓடிப்போன முட்டாள். டாக்டர் சொன்னத நம்பி

எங்க அவ எனையும் ராஜியையும் பார்த்தா கோபப்பட்டே பைத்தியமாயிடுவான்னு அவ கிட்ட இனி கோபப்படக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டு,

எங்கூட வரேன்னு அழுத உங்களை

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Dove le storie prendono vita. Scoprilo ora