விசாகன் பின்னிருந்து தன்னை இடித்தவனைப் பிடி என்று கத்தியதும் உதயனும் தேவாவை பிடிக்க அவனைத் துரத்தினான். இருவரும் தாங்கள் கொண்ட மொத்த ஆத்திரத்தையும் ஒன்று திரட்டி அவனைப் பிடித்து நையப் புடைத்தெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அடுத்த சில நொடிகளில் அம்மருத்துவமனையின் காவலாளிகள் வந்து அவர்களிடமிருந்து தேவாவை மீட்டு மன்னிப்பினைக் கோர, அவன் அவர்களை பார்வையால் சுட்டெரித்துவிட்டு வெளியே சென்றிட, இவர்களுக்குத் தான் கொலைவெறி ஏறியது..
விசாகன் அவர்களிடமிருந்து திமிறிக் கொண்டு தப்பித்து தேவாவை பிடிக்க முயல, அவனோ வெளியே தனக்காக காத்திருந்த விலையுயர்ந்த வாகனத்தினை ஒருவன் அவனுக்காய் மிகுந்த பணிவுடன் திறந்துவிட, அவர்களை திரும்பி ஏளனமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பி விட்டான்.
உதயனும் விசாகனும் அவனை பின் தொடர முயற்சிக்க, ஆனால் அதற்கு அந்தக் காவலாளிகள் முட்டுக் கட்டையாக இருந்தனர்.. சரியாக அந்நேரம் ரஞ்சித் வந்திட, அவன் வேலை செய்யும் இடம் என்பதால் பதற்றத்தோடு " செக்கியூரிட்டி.. என்ன பண்ணிட்டு இருக்கிங்க " என்று மிரட்ட,
" டாக்டர் சார்.. இவங்க தான் இன்னைக்கு ரவுண்ட்ஸ் வந்திருந்த நம்ம கே.எஸ்.ஆர் சார அட்டேக் பண்ணாங்க சார்.." என்று குற்றம் சாட்டிட, விசாகனும் உதயனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இரஞ்சித் அவர்களை விடச் சொல்லிக் கேட்க, அவர்களோ ஏற்கனவே போலிஸில் தகவல் சொல்லியாயிற்று என்றனர்.. வெறும் ஒரு நிமிடத்தில் அத்தனையும் நடந்துவிட்டது.
ВЫ ЧИТАЕТЕ
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Документальная прозаபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
