21.என்னை மறந்தாயோ கண்ணம்மா

1.4K 96 107
                                        

காலை எழுந்ததும் அந்தக் கண் கொள்ளா காட்சியில் தன் கவலைகளை மறந்து வாய்விட்டுச் சிரித்தான் விசாகன்.

அவன் கேலிச் சிரிப்பை கண்டு ரோகிணியின் காதுக்குள் மெதுவாக சண்முகம்

" ஸ்டாரு.. ஸ்டார் ஸ்கொய்ட சிரிக்க வேணானு சொல்லு.. அவர் சிரிக்கிறத பார்த்தா நான் என்னமோ கொரலி வித்தக்காரன்னோன்னு எனக்கே ப்பீல் ஆகுது..ஏதோ உன்னை கட்டிக்கப் போற ஒரு காரணத்துக்காக நான் சும்மா இருக்கேன் "என்றான்.

" நீயேன்டா ப்பீல் பண்ற.. அவர சண்டைக்கு கூப்டு நீ யாருன்னு காமி..நம்ம பெரிய குளத்து சிங்கம்டா நீயி ",

அவளோ நேற்று விசாகன் தன்னை கேலி செய்த கோபத்தில் இருந்தாள்.

" என்னது சிங்கம்மா.  ஸ்டாரு..உனைய காலங்காத்தால நாலு ரவுண்டு நம்பூர ஓட வுட்டதுக்கு எனைய பழி வாங்கலியே... அவர பார்த்தியா.. நல்லா ஜிம்முக்குலாம் போயி ஜம்முனு பாடிய வெச்சிருக்காரு.. வீனா அவருட்ட வம்பிழுந்து இந்த பஞ்சு பாடிய பஞ்சர் பண்ண சொல்றீயா "..

" டேய் சும்மா இரு.. நீ தான்டா  நம்ம ஸ்கூல்ல கராத்தே சேம்பியன்னு..கலெக்டர் கையால பிரசைல்லா வாங்குனேன்னு சொன்னியே.. அப்ரோ என்னடா.. அதை நம்பிதான உனைய குருவா ஏத்துக்கிட்டேன்.. நீ அவரோட சண்டை போட்டு உன் திறமைய காமி "

அவள் முகபாவத்தை எந்த ஆங்கிள் வெச்சுப் பார்த்தாலும் அவள் கலாய்ப்பது போல தெரியல.. ஆனா சண்முகம் ஏன் ஜகா வாங்குறான்..

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Donde viven las historias. Descúbrelo ahora