8.என்னை மறந்தாயோ கண்ணம்மா

1.5K 91 8
                                        

கண்ணாடித் தடுப்பு வழியே
பாஹேஷ்வரிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அறையின் நிலைமையும் ரஞ்சித்தின் தலைக்கட்டை பார்த்ததுமே அவர்களுக்கு தற்போதைய நிலையை எடுத்துரைத்தது.. தாங்கள் உயிருடன் இருந்தும் தன் தாயினை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டேன் என்று உதயனும் வளர்ப்பு மகன் விசாகனும் தங்களையே நொந்து கொண்டனர்.

வாசு தன் மனைவியின் நிலையைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.உங்களை நினைத்தே அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்றே விசாகன் அவரிடம் கூறியிருந்தான்.

அவர்களைக் கண்ட இரஞ்சித் கதவை திறந்து வெளியே வந்து மீண்டும் அந்தக் கதவை பூட்டிவிட்டு
" விசாகா.. நல்ல வேளை அவர கூட்டிட்டு வந்த.. அவுங்க டிரீட்மென்ட்க்கு ஒத்துழைப்பே தர மாட்டீங்கறாங்க.. மயக்க ஊசி போடக்கூட பக்கத்துல விட மாட்டீங்கறாங்க.. சார்.. அவுங்க கிட்ட நீங்க ஏதாச்சும் பேச்சு கொடுங்க.. அவுங்கள பேச வைங்க சார்.. அப்பதான் அவுங்க கோபம் கொறஞ்சு நார்மல் ஆவாங்க "

விசாகன் " ப்ளீஸ் அத்தைக்கிட்ட பேசுங்க.. உங்க கோபம் பிடிவாதத்த விட்டுக் கொடுத்து இந்த ஒரு உதவிய பண்ணுங்க. என்னால அவுங்கள அப்டி பார்க்க முடியல "
எனக் கெஞ்ச, அவனருகில் உதயனும் பார்வையால் அதைத்தான் வேண்டிக் கொண்டிருந்தான். ஆனால் அவரோ வாயைத் திறக்கமால் விசாகனையும் கதவு வழியே  பாஹீயையும்தான் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார்.

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Место, где живут истории. Откройте их для себя