10.என்னை மறந்தாயோ கண்ணம்மா

1.5K 91 54
                                        

மருத்துவரின் சிகிச்சையினால் இரண்டு மணி நேரங்கள் கழித்து கண் திறந்த பாஹீ மயக்கம் தெளிந்து சுற்றுப்புறம் நோக்கினாள்.

அவள் படுத்திருந்த அறையில் மாட்டியிருக்கும் வாசுவின் புகைப்படமே தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர்த்திவிட, தன் கழுத்தில் கடந்த மஞ்சள் கயிறு மீதியினை எடுத்துக் கூறியது.

அவளுக்கு தேவையானவற்றை பருவதம் விழுந்தடித்து செய்து கொண்டிருந்தார்.  ஊருக்கே திருமணம் செய்து வைக்கும் மகன் என்றாவது அவனுக்குமே அப்படி திடீரென்று செய்து கொண்டு தான் வரப்போகிறான் என்பதை என்றோ யூகித்துத்தான் வைத்திருந்தார். அதனால் அவருக்கு பெரியதாக வாசுவின் திருமணம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதுவும் அவருக்கு மாடிவீட்டு மகாராணி மருமகளாய் வந்ததால் உற்சாகம் தாங்கவில்லை.. அக்கம்பக்கத்தினர் வாசுவின் திருமண செய்தி கேள்விப்பட்டு வாசலை எட்டிப் பார்த்தால் போதும் தன் மருமகளின் பெருமைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார்..

" எக்கோவ்..நம்ம மாணிக்கமய்யா பொண்ணைய வாசு இழுத்துட்டு வந்துட்டான் " என்று ஒரு பெண்மணி கேட்டதும்தான் தாமதம்

" வோய்..வாயக் கழுவுடி.. என்ற மகன் ஐயா முன்னாடியே அவர் பொண்ண கல்யாணம் பண்ணி முறையா தான் கூட்டிட்டு வந்தான்..

என் மருமக மட்டும் என்னவாம்..கட்டுனா என் பையனத்தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நின்னு சாதிச்சிருக்கா.. "

" அன்னைக்கு வாசுலா நான் சொல்ற பொண்ணத்தான் கட்டிப்பானு பீத்திக்கிட்டு திருஞ்ச.. இப்போ மாத்தி பேசற"

" அது அது... அது வந்து ஆமாடி மாத்திதான் பேசறேன்.. என்ற மருமக அழகப் பார்த்தீல.. எம்புட்டு அழகு.. அவ ஒத்த புருவ அழகுக்கு ஈடாவாளுங்களா நம்பூரு பொண்ணுக.. அதென்ன படம்.. ரசினி நடிச்சப் படம்..பாம்பக் கூட கைல புடிச்சு முத்தக் கொடுப்பாவல்ல"

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Where stories live. Discover now