30.என்னை மறந்தாயோ கண்ணம்மா

1.5K 90 54
                                        

நாட்கள் அதன்பாட்டிற்கு நகர,

சண்முகம் கல்லூரி விடுதிக்கு சென்றிருந்தான்..

தேவா குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகியிருந்தான்..பெற்ற மகளை சொந்தம் கொள்ள முடியாது என்கிற நிதர்சனம் தெரிந்த பின்பும் வருத்தம் மட்டும்  ஆறாவடுவாய் இருவருக்கும் இருக்க தங்கள் வாழ்வை வாழத் துவங்கினர்.. அவர்கள் மகள் சொந்தம் கொண்டாட முடியாத இடத்தில் அல்லவா இருக்கிறாள்..

குழந்தையை தூக்கி கொடுத்துவிட்டு சென்றதால் தாயாக ராஜியோ, குழந்தைக்கு தகப்பன் என்ற உரிமையை சரியான நேரத்தில் கொடுக்காததால்  தந்தையாக தேவாவோ,

தங்களது கடைமையைச் செய்யவில்லை..

ஆதலால் அவர்களால் வருத்தம் மட்டுமே அடைய முடியும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை ஏற்றுக் கொண்டனர்.

மற்றபடி அவனுக்கு தனது மனைவி மகனோடு நேரம் கழிக்கவே நேரம் போதாமல் இருந்தது..விட்டால் இருபத்தி நான்கு மணி நேரம் போதாது என அடுத்த நாளின் மணித்துளிகளையும் கடன் வாங்கி விடுவான் போலும்..

முற்பகுதியில் வாழாத வாழ்வனைத்தையும் பிற்பகுதியில் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்..

ராஜிக்கும் இழந்த அவனது கணவன் கிடைத்துவிட்டான் வேறென்ன சொல்ல..

தன்னால் தன் குடும்பம் பட்ட கஷ்டத்தை நினைத்து வருந்தாத நாளில்லையே அவள்..

ஆனால் இன்று, தான் கணவனென தேர்ந்தெடுத்தவன் நல்லவன்தான் என்ற சந்தோசமே அவள் மனதை நிறைத்திருந்தது..

அதுவும் அவன் தன்னோடு சேர்த்து தீரனையும் ஏற்றுக் கொண்டது..அவனை தன் மகனென்று ஊருக்கு உரைத்து தங்களுக்கென அடையாளம் கொடுத்தது..

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Место, где живут истории. Откройте их для себя