இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு..
விவசாயத்தையும் தாண்டி தொழிற்சாலைகள் கொடிக்கட்டிப் பறக்கத் துவங்கிய காலமது.
புகளூர் .. நகரமயமாகிக் கொண்டிருந்த கிராமம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
அப்போது வாசுதேவன் இருபத்தி நான்கு வயது கட்டிளங்காளை..பெரியாரின் தீவிர பக்தன்.
அவனது அடையாளம் என்றாலே கருப்புச் சட்டைதான்.. வாரத்தில் ஆறு நாட்களும் அந்தக் கருப்புச் சட்டைதான். மீதி இருக்கும் ஒரு நாள் மட்டும் அவளவனுக்கு பிடித்த நிறமான அடர்மஞ்சள் நிறச் சட்டையில் அந்தக் கருப்புச் சட்டைக்காரன் காதல்காரனாக மாறிவிடுவான்.. முறுக்கிய மீசையும்..அடர் சுருட்டை கேசமும் அவனுக்கு இன்னும் கம்பீரத்தைச் சேர்த்து கொடுத்தன.. ..
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவன் அந்த ஊரின் மிகப்பெரும் பணக்காரர் மாணிக்கத்தின் தொழிற்சாலையில் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். மாணிக்கத்தின் மூத்த மகனான சுந்தர் அவருக்கு பிடித்த மருத்துவ துறையினை நோக்கி சென்றிட, தனது உயிர் நண்பனை தனது தந்தையின் அனுமதியோடு அவருக்கு துணையாக பணியில் அமர்த்தினான்.அங்கே வாசுதான்
தொழிற்சங்க தலைவர் பதவியும் வகிக்கிறான்.
ஊரில் பாதி பிரச்சனைகளை அவன் தீர்த்துவைக்க, மீதி பிரச்சனைக்கு அவனே காரணமாக இருப்பான்.அவன் காதல் ஜோடிகளுக்கு கடவுள்.. ஆம் ஊரில் காதல் திருமணம் என்றாலோ கலப்புத் திருமணம் என்றாலோ அதில் அவன் தலையீடு இருக்கும். நல்ல ஜோடி என்றால் அதனை பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் நடத்தி வைப்பான். சிலசமயம் பெற்றோர்கள் ஜாதி, அந்தஸ்து என எதிர்க்கும் போது தள்ளுமுள்ளு நடத்தியாவாது வெற்றிகரமாக நடத்தி வைப்பான்.தவறான சில ஜோடிகளை பிரித்தும் வைத்திருக்கிறான்.
பெரியாரின் சீடன் ஆதலால் மறுமணம் நடத்தி வைப்பதில் மிகுந்த ஆர்வமுடையவன்.. அவனது இந்த குணத்தால் நட்பையும் பகையையும் ஊர் முழுதுமே சம்பாரித்து வைத்திருந்தான்.
எதிரிகள் அதிகம் இருந்தாலும் யாருக்கும் அவனைத் தொடுவதற்கு தைரியமில்லை..
அந்தளவுக்கு வில்லங்கம் பிடித்த ஆள்..
ВЫ ЧИТАЕТЕ
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Документальная прозаபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
