23.என்னை மறந்தாயோ கண்ணம்மா

1.4K 88 90
                                        

பெரியகுளம் காலை 5.40..

ஊரிலுள்ள இளம்பெண்களுக்கும் வயதானவர்களும் ஒரு திடலில் குழுமியிருந்தனர்..

சிறுவர்களும் வயதானவர்களும் யோகாசனத்தில் ஈடுபட்டிருக்க, சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் தற்காப்புக்கலையின் அடிப்படைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

அங்கே விசாகனின் கட்டளைப்படி அனைவரும் சிரத்தையுடன் கற்றுக் கொண்டிருந்தனர்.. யார் மனதையும் வதைக்காமல் இளகிய முறையிலும் அதே சமயம் ஒரு கட்டுப்பாடோடு அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லித் தந்து கொண்டிருந்தான்..

அன்று சொன்னது போல ரோகிணிக்கு தற்காப்புக் கலைகள் கற்றுத் தருவதோடு நிறுத்தி விடாமல் அங்கிருக்கும் பெண்களின் பாதுகாப்புக்காவும் இந்த முயற்சியை எடுத்திருந்தான்.. வளர்ந்து வரும் பாலீயல் கொடுமைகளை தடுப்பதற்கு ஒரு முதற்புள்ளியை நாட்டியிருந்தான்.. ஊர்மக்களும் அவன்பேச்சில் கல்லுண்ட வண்டாய் மயங்கி அவனுக்கு ஒத்துழைத்தனர்..

பெற்றவர்களும் ஆண் என்று பேதம் பார்க்காது வாசுவின் மீதுள்ள நம்பிக்கையில் தன் பிள்ளைகளை அனுப்பி வைத்து தாங்களும் அதில் பங்கு கொண்டனர்..

ரோகிணியும் சண்முகனும் தான் இதற்கு கொள்கை பரப்புச் செயலாளர்.. அவர்களுமே முழு ஈடுபாடோடு அதில் பங்கு பெற்றனர்..

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

பளபளக்கும் கோட் சூட்டில் தனது கட்டைக் காலை மறைத்து மனதில் வஞ்சத்தையும் அடுத்தவன் பணத்தில் உடலையும் வளர்த்து கொழுத்துப் போய் இந்தியா வந்து சேர்ந்தான் ரகுபதி..

இட்லி
தோசை சாதம் என்றால் என்ன என்று கேட்கும் வெளிநாட்டு விளங்காத பன்னியாய் வந்து சேர்ந்தவன் சற்று தெளிந்திருந்த தேவாவை குழப்ப தயாராகினான்..

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Место, где живут истории. Откройте их для себя