விசாகன் பதில் சொல்லி விடுவானா என்கிற தவிப்பில் சண்முகம் பார்த்திருக்க, ரோகிணியோ அவன் பதிலை சொல்லி விட வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்தாள்..
விசாகனும் அவள் தவிப்பிற்காகவே ஒரே நிமிடத்தில் பதிலை கண்டுபிடித்து விட்டான்..
" முதல் மகனுக்கு
கால் லிட்டர் மாடு ஐந்தும் முக்கால் லிட்டர் மாடு ஒன்றும் இரண்டு லிட்டர் மாடு நான்கு..
இரண்டாம் மகனுக்கும் இதே போல் பிரித்துக் கொடுக்கலாம்..
மூன்றாவது மகனுக்கு மீதமுள்ள எட்டு முக்கால் லிட்டர் மாடுகளும், இரண்டு இரண்டு லிட்டர் மாடும் கொடுக்கலாம்..
லிட்டரும் பத்து உருப்படியும் பத்து போதுமா.. "
சண்முகன் பெருமூச்சு ஒன்றினை விட, ரோகிணி ஹேய்..என்று துள்ளி குதித்தாள்...
அவள் சந்தோசத்திற்காகவே எண்ண வேண்டும் என்றாலும் செய்யலாம் போன்று தோன்றியது விசாகனுக்கு....
பந்தயத்தின் படி சண்முகன் முனகியபடியே மருதாணிக் கிண்ணத்தைக் கையிலெடுக்க, வாசு அவனிடமிருந்து அதனை வாங்கிக் கொண்டான்.
" மாமா.. இது புதினாச்சட்னி இல்ல.. மருதாணி "
அவனை வாசு முரைத்த முரைப்பில் " என்னமோ போங்கப்பா..எல்லோரும் ஒரு மார்க்கமாத்தான் திரியுரீங்க.. என்னைய கொஞ்சமாச்சும் ஸ்கோர் பண்ண விடறீங்களா.."
அழுத்துக் கொண்டான்..
" சண்முகா.. வாசு மாதிரி அழகா யாருமே மருதாணி வெக்க முடியாது தெரியுமா.. "
பாஹீ தங்கள் கடந்த கால நினைவில் வாசுவை காதலாய் பார்த்து சொல்ல,
விசகான் ' பிள்ளையில்லா வீட்டுல கிழவன் துள்ளி விளையாண்டானாம் ' சத்தமாகவே அங்கலாய்த்துக் கொண்டான். பின்னே அவன் விடுகதைக்கு பதிலை சொல்லி ரோகிணியை மகிழ்விக்க நினைக்க, வாசுவோ அந்த சந்தோசம் கூட நிலைக்க விடாது மகளின் கவனத்தை தான் பெற்றுக் கொண்டால் கோபம் வரும்தானே அவனுக்கும்..
ВЫ ЧИТАЕТЕ
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Документальная прозаபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
