உத்ரா, ரோகிணியைக் கூட்டிக்கொண்டு வாடகை வண்டியில் பெருங்குளம் வந்து சேர்ந்தாள். அப்பத்தா வாசலை வெறித்தவாரே கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தார்.
ரோகிணியைக் கண்டதும் அந்த தள்ளாத வயதிலும் ஓடிவந்து " அட கூறுகெட்ட சிறுக்கி மவளே.. நானு என்னத்த சொல்லிட்டேனு கைய அறுத்துக்கிட்ட சாவப் போன.. உன்ற இரத்தத்த கண்டதும் என் அஞ்சு உசிரும் பஞ்சாப் போயிடுச்சிடுடி ஆத்தா.. நீ போயிட்டா என் மவனே என்னைய கொண்டுருப்பானே..பாதகத்தி.. " என்று அக்கறை பாதியும் சுயநலம் மீதியாய் விசனப்பட,
" கவலைப்படாத.. நான் சாகல..அதுனால நீ அவர்கிட்டருந்து தப்பிச்சிட்ட..என்னோட அப்பா.. மன்னிச்சிக்க.. உன்னோட பையன நீ சொன்ன மாதிரியே உன் சொந்த பேரனோடயே அனுப்பி வெச்சிட்டேன்..இனிமே சந்தோசமா இரு.. " என்று அவர் முகம் காணாமல் சொல்ல, பருவதத்திற்கு தன் மகன் அவன் குடும்பத்தோடு சேர்ந்து விட்டான் என்ற சந்தோசத்தோடு ரோகிணியை நினைத்தும் கவலையாக இருந்தது..
முந்தானையை உதறி இடுப்பில் செருகியவர், அவளது இடக்கையைப் பிடித்துக் கொண்டு " சரி அவன் போனா போகட்டும்...நீ உள்ளாற போயி படுத்துக்க, நான் கஞ்சி வெச்சாறேன் " என்றழைக்க, அவர் கையை தட்டி விட்டவள்
" எனக்காக நீ எதும் செய்யாத..நான் உன் சொந்த பேத்தி இல்லையே.. ஒன்ட வந்தவ மகதான.." என்றவள் " உன்னோட பையன் கொஞ்ச நாள்ல வந்து உன்னைய கூட்டிட்டு போயிருவார் .நீ, உன் மகன், பேரன் ,மருமவளோட சந்தோசமா இரு.. " என்று உள்ளே செல்லப்போக,
அவருக்குள் ஏதோ ஒன்று நெஞ்சை பிசைவது போல இருந்தது..
YOU ARE READING
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Non-Fictionபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
