ஆள் மாறி ஆடை மாறி ஏன் சுபாவம் மாறிப் போயினும் அவன் உலகை அந்தக் கோள விழிக்குள் அடக்கியாளும் வித்தையை மட்டும் மறவாது வைத்திருந்தாள் போலும்.. அவள் முகபாவமும் உடல் வாகும் வேறு எதனையோ காட்ட, அவளது கண்கள் மட்டும் அவனை தன்னை விட்டு பிரித்திடா வண்ணம் அவனை தன் வசப்படுத்திக் கொண்டிருந்தது.. அதில் என்ன சிறு மாற்றமென்றால் முன்னர் அவனை காண நாணி பதற்றத்தில் உருளும் கோள விழிகள் இன்று கோபத்தில் முரைத்துவாறு சுழன்று கொண்டிருந்தது..
தேவா ராஜி தீரன் மூவரும் இப்போது மும்பையை நோக்கி தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தனர்.. அவன் நினைத்தால் விமானத்தையே அவளுக்கு பரிசாக அளிக்க முடியும்..ஆனால் அவளின் சிறு கடைக்கண் பார்வைக்காக இத்தனை வருடங்கள் தான் மறந்து போயிருந்த இரயில்வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.. புத்தகம் படிப்பது போல தன்னைக் காட்டிக் கொண்டாலும் விடாது அவளையே பார்த்திருக்கும் அவனது பார்வையில் கோபம் கொண்டு தான் அவனை முரைத்துக் கொண்டிருந்தாள்..
உண்மையில் ராஜியின் நிலை என்ன?
அவள் தேவாவைப் பற்றி என்ன நினைக்கிறாள்..
ராஜியின் காதல் வீட்டிற்கு தெரிந்த பின்பும், தேவாவைப் பற்றிய எந்த தகவலும் தெரியாத போதும், தன்னை வீட்டிலுள்ளவர்கள் திட்டி அடித்த போதும் அவன் திரும்பி வருவான் இல்லையென்றால் அவனை அவனது வீட்டினர் வற்புறுத்தி அடைத்து சித்திரவதை செய்து தன்னை சந்திக்க விடாது தடுத்திருப்பார்கள் என்று தான் நினைத்திருந்தாலே ஒழிய அவன் தன்னை ஏமாற்றி விட்டான்..அவன் காதல் பொய் என்று என்றுமே நினைத்ததில்லை..
அவள் காதலித்தது தான் தன் குடும்பத்தின் அவல நிலைக்கு காரணமே என்று வருந்தினாலே ஒழிய தேவாவை காதலித்தது தவறு என்று எண்ணவில்லை.. அவள் அவனை எவ்வளவு தூரம் நேசித்திருந்தால் தன் தாய் தகப்பனுக்கு கூட தெரியாது அவனை திருமணம் செய்திருக்க சம்மதித்து இருப்பாள். அனைத்துமே அவன்மீது அவள் கொண்ட காதலினால் தானே.. அப்படியெனில் அவன் நடத்தையும் அவள் காதலிற்கு காரணம் தானே..
ESTÁS LEYENDO
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
No Ficciónபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
