13.என்னை மறந்தாயோ கண்ணம்மா

1.5K 93 54
                                        

கைகளில் விலங்கு பூட்டப்பட்டு இருக்க அதனை பார்த்தவாரே அமைதியாக படுத்திருந்தார் பாஹீ.. அன்பின் மறு உருவமாய் திகழ்ந்த தன் தாயின் இந்நிலையை பிள்ளைகளால் காண சகியவில்லை..

உதயன் மெதுவாக " அம்மா" என்றழைக்க அவர் கண்களில் வழிந்த கண்ணீர், தற்போது இருப்பது ஈஸ்வரி என்பதனை உணர்த்த புன்னகையோடு அவரை நெருங்கி உதயனும் விசாகனும் ஆளுக்கொருபுறம் அமர்ந்தனர். என்னைப் பற்றி அனைத்தையும் அறிந்து விட்டீர்களா.. நான் பாவி என்பது உங்களுக்கும் தெரிந்து விட்டதா என்பதுபோல அவர் பார்வை இருந்தது.. 

" நான் பைத்தியமா கண்ணா " என பாவமாக அவர் கைவிலங்கைக் காட்டிக் கேட்க, அதனைக் கேட்ட பிள்ளைகளின் நிலையை சொல்லவா வேண்டும்.. மனதின் வலியை அளவிடும் கருவியை யார் கண்டுபிடிப்பது.. இந்த வலியை அனுபவித்திடக் கூடாது என்பதற்காகத்தான் வாசு ஓடிவிட்டான் போலும்..

" அத்தை உங்களுக்கு ஒன்னுமில்ல..பிரசர் அதிகமானதால மயங்கிட்டிங்க " என்ற விசாகனின் நடுங்கிய குரல் ஒன்றே போதுமே அவனின் வலியைச் சொல்ல.

" விசு.. உங்க மாமா இந்த நிலை எனக்கு வரக் கூடாதுன்னு தான எனைய விட்டுட்டு போனாரு.. இப்போதான் நான் முழு பைத்தியமா மாறிட்டேன்ல இனியாவது அவர எங்கிட்ட வரச் சொல்வியா" என்றவரது குரலில் வருத்தத்தைக் காட்டிலும் அவர் இங்கிருக்கிறாரா என்கிற ஆர்வம் அதிகமாகத் தெரிந்தது..

" அம்மா அப்படினா அவர் செஞ்ச தப்பையெல்லாம்  மன்னிச்சி ஏத்திக்கப் போறீங்களா.. கணவனே கண் கண்ட தெய்வம்னு அவர் உங்கள விட்டு போன பின்னாடி கூட அவர வெறுக்காம திரும்பவும் அவரோட வாழ நினைக்கிறீங்களா..வேணாம்மா அவர் " என உதயன் பேச்சை ஆரம்பிக்க பாஹீயின் முகபாவம் மாறத் துவங்கியது... சிவந்த அவர் கண்களை கண்டபின் தன் பேச்சை நிறுத்தினான் .

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Donde viven las historias. Descúbrelo ahora