20.என்னை மறந்தாயோ கண்ணம்மா

1.3K 90 97
                                        

பயத்தில் நெற்றியில் வியர்வை முத்து முத்தாக வழிய, அதனை தனது கைக்குட்டையை வைத்து துடைத்தவள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு

"சார் நீங்க என்ன கேட்க வரீங்கன்னு எனக்கு புரியல சார்" என்க,

" லுக் மிஸ்.உத்ரா.. அப்போ இந்த ஸ்பீக்கருக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது "

" எ..ஸ்ஸ் ..சார்"

பயத்தை மறைத்து தெளிவாக பதில் சொன்னாள்.

" ம்.. ஓகே.. நீங்க கிளம்பலாம் "

" சார்.... "

" நான் உங்கள கிளம்ப சொன்னேன்"

அவளும் வெளியே வந்து தன் வேலையை பார்க்கலானாள்.. இருந்தும் இனி பார்த்துத்தான் நடந்து கொள்ள வேண்டும் என தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

தேவாவிற்கு உத்ராவின் நடவடிக்கைகள் சந்தேகத்தைக் கொடுத்தாலும் அவள் அவனுக்கு எதிராக எந்த செயலும் இதுவரை செய்தததில்லை என்பதால் அமைதி காத்தான்.. தனது கம்பெனியில் வேலை செய்பவர்களிடம் போலியாக ஒரு நபரை அனுப்பி கம்பெனி விவரங்களை திருடி தந்தால் பணம் கொடுப்பதாக ஏமாற்றி அவர்களின் உண்மை முகத்தினை அறிந்து கொள்ள முயற்சி செய்வான்.. இதன்மூலம் விசுவாசிகளை தனியாக பிரித்தெடுத்து துரோகிகளை இனம் கண்டு கொண்டு அவர்களுக்கு தக்க தண்டனை கொடுப்பான்.

அந்த வகையில் உத்ரா விசுவாசிகளின் பக்கம் இருக்க, அவளை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். தொழிலில் உபயோகித்த இதே மூளையை ரகுபதியின் விசயத்திலும் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.. ஹூம்..

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Onde histórias criam vida. Descubra agora