💞 நான் அறிவேன்
இப்போது இல்லை என்றாலும்
என்றாவது ஒருநாள்
நிச்சயமாக நீ என்னைத்
தேடத் தொடங்குவாய்..அன்று உனது கண்களும் கால்களும்
நான் போன திசையெல்லாம்
என்னை மௌனமாய்
விசாரித்துக் கொண்டிருக்கும்..அப்போது நான் உனது
விம்பங்களிலிருந்து விலகி
நீண்ட தூரம் போயிருப்பேன்..என்னைப் பற்றிய
எண்ணங்களால்
நீ எரிந்து கொண்டிருப்பாய்..கடந்து போன இனிப்பான
காலங்களை அப்போது
துப்ப நினைப்பாய்..அன்று நிச்சயமாக
உனக்கு கைக்குட்டை
போதாமல் போகலாம்..கண்ணிமை உதிரும்வரை
கண்ணீர் வடிப்பாய்..
அன்றுதான் எனக்குத் தெரிந்து
நீ அதிகமாக அழுதிருப்பாய்..ஏன் பிரிவு கொண்டோம் என்ற
வினாவுக்கு அப்பால்
எதற்காக இணைந்து
இருந்தோம் என்ற கேள்வியில்
கிறங்கிப் போவாய்..உனது தேடலின் முடிவில்
எப்படியோ என்னைக்
கண்டுபிடித்து விடுவாய்..
ஆனாலும்,
தோற்றுப் போயிருப்பாய்..நீ கண்டுபிடித்தது
என்னை அல்ல,,
எனது கல்லறையை....😒🥺..NR..
YOU ARE READING
அவளும் நானும்
Poetryதுடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩❤️👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும் நானும்.. இப்படிக்கு, 🌛நி...