💞 நினைப்பதெல்லாம்
நானாகி போன காரணம்....
என் நினைவுகளில்
நித்தமும் நீ வந்து என்னை
நிந்தனையாவது
செய்வாய் என்று தான்....ஆனால்,,
நினைக்க தெரியாத உன்னிடம்
நினைவுகளை எதிர்பார்த்தது
என் தவறு தான்....இருந்தாலும்
சொல்லிவிடுகிறேன்
சொற்பேச்சு கேளாத
என் சொந்த மனதிடம்....நீ வந்தழைத்தால்
இனி ஒரு முறை
வாடகையாய் அல்ல
வாழ்க்கையாய் மட்டுமே
அனுமதி என்று....இல்லையென்றால்
பேசத் தெரியாத
என் பாவி இதயம்
பரிதவித்து உனக்காய்
என்னிடம் பரிந்து பேசும்....என்ன தான் செய்வதோ
என்னுள் இருந்து கொண்டு
உனக்காய் பேசும்
அதற்கெங்கு புரியும்
நான் உனதென்று
உனக்கே புரியாதபோது....😉இதயமாயும் நீ இன்று
இதயதுடிப்பாயும் நீ
..நிலா ரசிகன்..
YOU ARE READING
அவளும் நானும்
Poetryதுடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩❤️👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும் நானும்.. இப்படிக்கு, 🌛நி...