💞 மதி விரியும் மாலைப் பொழுதில்
செங்கதிர் தாங்கிய
செவ்வானத்து செம்பரிதி
என் சிந்தையில் நிறைய..என்னை தாண்டி சென்ற
தென்றல் தீண்ட தென்னை தன்
ஓலை கைகளால் மூங்கில் மேனி தீண்ட
தென்றலணைத்து மூங்கில்
பாட்டிசைத்து தன் காதலை
பரிமாறிக் கொண்டிருக்கும்
இப்பொழுதில்,, என்னை அணைத்த
தென்றலுக்கு எங்ஙனம் தெரியும்
நான் காதல் பரிமாற என்னவள்
என்னருகில் இல்லையென 🥺..இருந்தாலும்,, என் சிந்தையில்
நிறைந்த செங்கதிர் தாங்கிய
இந்த செந்நிற மங்கையவள் மேல்
சில நொடி நான்
மையல் கொண்டது உண்மையே,,
என்னவள் என்னருகில் இல்லாத
இந்நொடியில்..😉..Nila Rasigan..
YOU ARE READING
அவளும் நானும்
Poetryதுடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩❤️👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும் நானும்.. இப்படிக்கு, 🌛நி...