44. ஏன் என் வாழ்வில் வந்தாய்?

54 4 3
                                    

💞 ஏன் என் வாழ்வில் வந்தாய்?
இதுவரை விடை தெரியாத கேள்வி..
நீ சென்று பல நாட்களாகியும்
மறக்க மறுக்கிறது மனது..
நீ எனக்கு காதல் மட்டும்
தரவில்லை என்பதை
அழுத்தமாக உணர்த்தியது
உன் பிரிவு..
என் உயிரின் உயிரே
கொஞ்சம் பொறுத்திருந்தால்
என் உயிர் பிழைத்திருக்குமே..
உடலில் இருந்தால் தான்
உயிர் என்பது அர்த்தமில்லை..
நேசித்தவர்கள் அருகில்
இருந்தால் தான்
இந்த உயிர் என்பதே அர்த்தம்..
இன்னும் எத்தனை யுகங்கள்
இந்த வலி தொடரும் என்று
தெரியவில்லை..
இந்த வலிகள் தொடரவே
விரும்புகிறேன்..
இந்த வலிகள் எப்பொழுதும்
உன்னை நினைவு
படுத்துவதாலேயே
இந்த வலியை இன்னும்
அதிகமாக விரும்புகின்றேன்..
மீண்டும் பூக்கிறது கண்ணீர்..
இப்பொழுதாவது பதில் சொல்
ஏன் என் வாழ்வில் வந்தாய் ??....😔

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now