💞 காரிருள் காட்டில்
கட்டவிழ்த்து விடப்பட்ட
கதிரவன் காதலியாய்
கறுப்பு வானின் கனவுக் கன்னியாய்
கண்ணெதிரே வளர்ந்திடும்
காதல் குமரியாய்
காலமெல்லாம் காட்சியளிக்கும்
காவல் காரிகையாய்
காந்தமாய் கட்டியிழுக்கும் காந்தையாய்
கண் சிமிட்டும் தாரகை கூட்டத்தில்
கடமையே கண்ணென நிற்கும் காரிகையாய்
கலங்கமில்லா உன் முகம் காட்டி
கடந்து வரும் உன் பாதையில்
கண்ணை மூடி நீ ஒளிந்து
கொள்ளும் அந்த ஒற்றை
அமாவாசை தான் நிலவே உன்
காதல் விடுமுறை நாளோ....? 😉..NR..
YOU ARE READING
அவளும் நானும்
Poetryதுடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩❤️👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும் நானும்.. இப்படிக்கு, 🌛நி...