💞 உன் முகம் பார்க்கும் தேவதையும்
கண் இமைக்காது உறைந்து நிற்கும்..
உன் அழகை கண்டு
வெண்மேகம் உன்னை தொடவே
கவிதை மழை பொழியும்..
கண்கள்,, உன் கண்கள் அது அந்த விண்மீனுக்கே வெளிச்சம் தரும்..
உன் முகம் கண்ட
வெண்நிலவு தன் முகத்தை
திருப்பியே வருத்தப்படும்..
உன் புருவம் இரண்டு போதும்
நெஞ்சை குத்தி கிழிக்க..
நடுவே அந்த பொட்டு,,
கடவுளே,, போதும் இதற்கு மேல்
என்னால் முடியவில்லை அவளின் வதனங்களை வருணிக்க..
காலங்கள் போதாது எனக்கு..
வரம் கேட்பேன் கடவுளிடம்
இறக்கும் போதும் உன் முகம்
பார்த்தே இறக்க வேண்டுமென்று..
என்னவள் அவள் அழகு தேவதை....😉
..NR..
YOU ARE READING
அவளும் நானும்
Poetryதுடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩❤️👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும் நானும்.. இப்படிக்கு, 🌛நி...